Sunday 30 December 2012

பெற்றோர்களை பிரிக்கும் பிள்ளைகள். . .

குடும்பத்தில் கணவர் மனைவினிடையே இருக்கும் பரஸ்பர அன்பு   காலமெல்லாம் தொடர்கின்ற ஒரு பந்தம் என்பார்கள்.  முதுமையின் போது ஒருவருக்கொருவர் துணையாக ஆயுள் முழுவதும் ஒன்றாக இருக்கவே இந்த பந்தம். 

ஆனால், பிள்ளைகளுக்கு திருமணமானவுடன் என்ன செய்கிறார்கள்?  பெற்றவர் இருவரையும் ஆளுக்கொருவராக தங்கள் பிள்ளைகளை கவனிக்க  தனித்தனியே பிரித்து அழைத்துச் சென்றுவிடுகின்றனர். 

பல குடும்பங்களில் நடக்கும் உண்மை இது.

வயதானோர் பிள்ளைகளை வருந்த விடமாட்டார்கள். எல்லாவற்றையும் தங்களுக்குள்ளேயே தேக்கி வைத்து சோகமும் வேதனையும் ஒன்று சேர வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் தாம் அவர்கள் மனதறிந்து அவர்களுக்கேற்றவற்றை செய்து,  அந்திம காலத்தில் அவர்களின் நிலை சோக கீதமாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment