Wednesday 1 November 2023

அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !

 

தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து . விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம் . பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு இன்று புழல் சிறையில் . நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவடல்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி . வடக்கன் வடகம் என்று பிரிவினை பேசி வயிறு வளர்த்து திரிந்த வாய்கள் இன்று அடக்கி ஒடுங்கி கிடக்கிறது . இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது . இந்தியாவின் மீது வன்மம் கொண்டு தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல் தன்னுடைய நாக்கை தானாகவே சூடு வைத்து ஒடுக்கி கொண்டது . இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல் இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது . அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்துவிட்டு கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார . தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க செய்தார் . ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை அண்ணா தெரியப்படுத்த நாசர் வீட்டுக்கு போனார் . கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார் . சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதி இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார் . மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை இந்திய அளவில் கொண்டு சென்று பொய் கூறிய கும்பலை திணற வைத்தார் . திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார் . நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார் . கால்டுவெல் பாதிரி , ராமசாமி , அண்ணாதுரை , கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு தமிழருக்கு தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் திக்கி திணறுகிறது போலி திராவிடம் . வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால் ராகுல் காந்தியும் , மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார் . மணல் மாபியா கொண்டு பெருத்த ஊழல்கள் செய்வதை அம்பலப்படுத்தி இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது . மின் கட்டண உயர்வை தெளிவாக விளக்கி கூறி மக்களின் ஆதரவை பெற்று திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார் . அறநிலையத்துறை செய்யும் அத்துமீறல்கள் சுரண்டல்கள் அட்டூழியங்களை படம் போட்டு காட்டியதால் சேகர்பாபுவை தலை தூக்க முடியாமல் தள்ளாட செய்திருக்கிறார் . என் மண் என் மக்கள் எனும் மக்கள் யாத்திரையில் பங்கு பெற்று ஒவ்வொரு பகுதி தொகுதி மக்களின் ஆத்மாவிலும் கலந்து வருவதால் திமுகவின் அடிநாளமே கதி கலங்கி போயிருக்கிறது . ஒவ்வொரு நிமிடமும் அண்ணாமலை அண்ணா என்ன செய்கிறார் எங்கு செல்கிறார் என்ன பேசுகிறார் என்பதை கவனிப்பதில் மட்டுமே தனது முழு உளவுத்துறையும் பயன்படுத்தி அவர் பேசும் விவரங்களுக்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பல்லை நெரித்து கொண்டிருக்கிறது திமுக கூடாரம் . எடப்பாடி பழனிச்சாமி திமுக செய்யும் திருட்டுகளை கண்டும் காணாமல் போவதால் அண்ணாமலை அண்ணா மக்களின் அத்தனை வாழ்வாதார பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதால் தமிழக மக்கள் அண்ணாமலை நோக்கி வர துவங்கி இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது திமுக . இனியும் தொடரும் போலி திராவிட கும்பல் அழியும் . #EnMannEnMakkal