Friday 4 December 2020

சாபம் பலிக்குமா?

 நல்லவங்கள வம்புக்கு இழுக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா,  அவர்களின் கோபம் நமது முன்னேற்றத்தை தடுக்கும்னு ஒரு நம்பிக்கை. 


சரி, நல்லவங்கன்னு எப்படி கண்டுகொள்வது?


தானுண்டு தங்கள் வேலையுண்டுன்னு யார் வம்புக்கு போகாம, ஒதுங்கி அமைதியா வாழ்பவர்களை இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவர்கள் மனமகிழ்ந்து வாழ்த்தினாலும் பலிக்கும், அவங்க மனம் நொந்து சாபமிட்டாலும் அது பலிக்கும்.

இதுல லாஜிக் உண்டா?
இதுக்கு குண்டக்க மண்டக்க மாதிரி ஒரு கேள்வி....


ஆசிர்வாதம் பெறும்போது தலைவணங்கி புன்னகையோடு ஏற்றுக்கொள்கிறோமே, அப்போ அதுக்கு ஈக்குவளாகவும், ஆப்போஸிட்டாகவும் நிர்பந்தமான செயல்வடிவம் தரும் சாபத்துக்கு உள்ள சக்தியையும் நம்பித்தானே ஆகணும்???