Monday 28 September 2015

அமெரிக்காவில் ஒரு ஊரில்

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..

1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
இது தான் அந்த விதிமுறைகள்....

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...

முதல் தளம் அறிக்கை பலகையில்,
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும்
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"

அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....

நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும்
"மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
*
*
*😎
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*😎
*
*
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம்,
பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"".....
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!

" கீழே படிகளில் இறங்கவும்".
என்று இருந்தது.

ஞானக் கதிர்கள் 2

தங்கம் ,சிலப்பதிகாரம் !
-------------------------------------

தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
நன்றி: -குமுதம் (10-01-2007).

-----------------------------------------

கருக்கல்!
காலை என்பதே கருக்கல் தான்.
எந்த ஜீவராசியும் சூரிய உதயத்திற்குப் பிறகு உறங்குவதில்லை மனிதன் மட்டும் தான் சூரிய உதயத்திற்குபிறகும் உறங்குகிறான் அதிகாலை 4:30 க்கும் 5:30 க்கும் இடைப்பட்ட நேரம் 'கருக்கல்' ஆகும்.
இந்த நேரத்தில் தான் பகலின் வெளிச்சக்காற்று தோன்றி மறைந்து சற்று இருட்டாக இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சுவாசித்தால் நெஞ்சில் உள்ள கெட்டக் காற்று நீங்கி அப்பழுக்கற்ற காற்று கிடைக்கும்.அது ஆரோக்கியத்தை அளிக்கும்.
நன்றி: -தினமலர் (26-12-2006).
-------------------------------------------------------

வாரண்டி - கியாரண்டி !
எந்த ஒரு பொருளுக்கும் தயாரிக்கும் நிறுவனம் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாகத் தரும் உத்தவாதம் வாரண்டி. கியாரண்டி என்பது டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் தருவது. கம்பெனிகள் நேரடியாக உத்தரவாதம் தரும்பொழுது பழுது ஏற்பட்டால் பொருளையே மாற்றித்தர வாய்ப்பு உண்டு. டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பழுதை நீக்கித் தருவதற்குத்தான் உத்தரவாதம் அளிப்பார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.

நன்றி:தகவல் தமயந்தி - குமுதம்(18-07-2007).
--------------------------------------------------------------------------


ஞானக் கதிர்கள் ....

மாயமான் இரகசியம்
----------------------------------------
இராமாயணத்தில் சீதை மானைப் பிடித்துக்கொண்டு வரும்படி இராமனைக் கேட்டபோது , வந்திருப்பது 'மாயமான்' என்று சொல்லிப் பேசாமல் இருந்திருக்கலாம். பின் என் அவர் போனார்? ஏற்கனவே மனைவியின் சொல்லைக் கேட்டு, இராமனைக் காட்டுக்குப் போகச் சொன்ன 'கெட்டப்பெயர்' தன் தந்தை தசரதனுக்கு வந்துவிட்டது. இப்பொழுது தான், மாய மானைத் தேடிப் போகாவிட்டால், அந்தக் கெட்டப் பெயர் சரித்திரத்தில் தந்தைக்கு மட்டுமே நிலைத்திருக்கும். அப்படித தந்தையின் பெயர் மட்டுமே 'மாசு' படுவதை விரும்பாத இராமர் தனக்கும் கொஞ்சம் வரட்டுமே என்று தான் மாய மான் பின்னால் போனார்.

நீடாமங்கலம் கிருஷ்ணமுர்த்தி பாகவதர்.
வானொலி உரை. குமுதம் - 10-01-1985.

----------------------------------------------------------

'ஆ', 'மா' அர்த்தம்?
------------------------------------
ரம்ஜானும், கிறிஸ்துமஸ் பண்டிகையும் டிசம்பரில் வருகிறது. இது இப்படி இருக்க திருப்பாவை , திருவெம்பாவை பற்றி சைவ வைணவ பேதமாக சிலர் நினைப்பது என்?
திருப்பாவையின் 'முதல் பாட்டின் முதல் எழுத்து "மா".(மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்.....)
திருவெம்பாவையின் முதல் பாட்டின் முதல் எழுத்து "ஆ"(ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியை.....).
ஆண்டாள் பாடிய 'மா' என்ற திருப்பாவைப் பாட்டின் முதல் எழுத்து , திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரைக் குறிக்கும்.
அதேபோல மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை யின் முதல் பாட்டின் முதல் வரியான 'ஆ' என்பது திருப்பாவை பாடிய ஆண்டாளைக் குறிக்கும்.

காஞ்சி பெரியவர் கூறியது - 27-05-1985
--------------------------------------------------------------------

பாரதியார்
-----------------------

காதல் பாடல்களை இயற்றிய பல கவிஞ்ஞர்களும், 'அடுத்த பிறவியிலும் நாம் இணை சேர்ந்து இருப்போம்; எனக்கு நீயே மனைவியாவாய் , உனக்கு நானே கணவன் ஆவேன்' என்று தான் பாடியிருக்கிறார்கள். பாரதியார் ஒருவர் தான் 'அடுத்த பிறவியில் நான் நீயாகவும், நீ நானாகவும் பிறந்து இணைவோம் ' என்று பாடினான்.
- வலம்புரி ஜான் கூறக்கேட்டது.


"காலா, என் காலருகே வாடா, உன்னை என் காலால் மிதிப்பேன் "என்றான் பாரதி. நாம் யாரையாவது மிதிக்கவேண்டுமென்று நினைத்தால் போய்த்தான் மிதிப்போம். "நான் உன்னை மிதிக்கணும், பக்கத்தில் வாடா" என்று கூப்பிடமாட்டோம். உயிரைப் பறிக்க வருகிற எமனையே "டே காலா...." என்றான் பாரதி. இந்த ஆண்மை, தன்னம்பிக்கை தான் தமிழ்க் கவிஞ்ஞனுக்கே உள்ள பெரிய சொத்து. அதனால்தான் எருமை வாகனத்தில் வரும் காலன், பாரதியின் உயிரைப் பறிக்க யானை மீது அம்பாரி வைத்து வந்தான்.
- வைரமுத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வலம்புரி ஜான் கூறியது. ஆனந்த விகடன் (03-09-1989).



'பக்தி பாடல்களை, காதல் பாடல்களை, வேதாந்தப் பாடல்களைப் பாட பாரதிக்கு முன் எத்தனையோப் பேர் இருந்தார்கள், ஆனால் தேசியம் பாட அவன் ஒருவனே இருந்தான்.
- ம.போ.சி கூறக்கேட்டது. (03-10-1985)

-------------------------------------------------------------

வாய் - கண்
------------------------

வாய்
மற்ற எந்த அவயத்தையும் விட வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். "வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி" என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் தாத்பர்யம்.
-ஜகத்குரு சந்திரசேகரேந்திரர்.


கண்
பாரத இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.
-20-04-1987.

------------------------------------------------------------

மூன்று சகோதரர்கள் ...
-------------------------------------

ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் மூவரும் சகோதரர்களாக இருந்தாலும் குணத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ராவணன் எப்போதும் பிறருக்குக் கெடுதலை நினைத்து, கெடுதலை செய்துவந்தான். கும்பகர்ணனோ கெடுதல் நினைக்க மாட்டான், நல்லதை நினைப்பான். ஆனால் கெடுதலைச் செய்வான். விபீஷணன் நல்லதை நினைப்பவன், நல்லதையே செய்பவன்.
- கி.வா.ஜ (23-7-1985)

--------------------------------------------------------------