Sunday 26 August 2018

புளோரியா புத்ராஜெயா 2018

சுமார் பத்தாண்டுகளாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு நிகழ்வாக இருந்து வந்த புத்ராஜெயா மலர்கண்காட்சி, ஓராண்டுக்குப் பின் மீண்டும் இடம்பெறுகிறது.

நேற்று, சனிக்கிழமை முதல் எதிர்வரும் செப்டெம்பர் 2ம் தேதி வரையில் புத்ராஜெயா பிரிசின்க்ட் 4ல், தாவரவியல்  சம்பந்தமான பயிரினங்களையும், மலர்த்தோட்டங்களையும், வெவ்வேறு நாடுகளின் மலர் அலங்காரங்களையும்  கண்டு களிக்கலாம்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற எல்லா மலர்க்கண்காட்சிகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்வேன்.... கண்களுக்கு குளிர்ச்சியாக, மனதுக்கு இதமாக, கவர்ந்திழுக்கும் வண்ணக்குவியல்கள் போன்ற மலர்களில் மிதக்க ஓடி வாருங்கள். இது வருடத்துக்கு ஒருமுறையே வரும் சந்தர்ப்பம்.

2017ல் இந்நிகழ்வு இடம்பெறவில்லை. கடந்த அரசு அதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டியது. இன்றைய அரசோ, தேசிய தினத்தையே புத்ராஜெயாவில் கொண்டாட திட்டம் வகுத்து அதற்கேற்றார்ப்போல் மலேசியர்கள் பலரையும் கவரும் இந்த மலர்க்கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.

2016ல் இடம்பெற்ற நிகழ்வின்போது பிடித்த படங்களில் சில இங்கே.
இவ்வருடத்திய படங்கள் நாளை முதல் இடம்பெறும்.....