Tuesday 13 September 2011

மாற்றி யோசிப்போம்...

புதிதாக செய்ய ஒன்றும் இல்லாத போது, இருப்பதை வைத்து மாற்றி யோசிக்கும் போது கிடைத்ததே இந்தப் படங்கள். ஒரே படத்தை இரண்டு முறை மாற்றியமைக்கும் போது  அந்த மாற்றங்களும் நன்றாகவே வந்தன.
   
( மிரர் இமேஜ் @ கண்ணாடியில் தெரிவது போன்ற பிம்பம். ஒரு படத்தை பாதியாக பிரித்து அதையே மறுபக்கமும் வைக்க புதிதாக இணைக்கப்பட்ட காட்சி இப்படி தோன்றும். )

( மேலுள்ள படத்தில் ஒரு படத்தின் சின்னதாக ஒரு பகுதியை மட்டுமே மீண்டும் பயன்படுத்தி இருக்கிறேன். அதாவது, என் உருவத்தை மட்டும் இரண்டாம் முறையாக அசலுடன் பொருத்தியிருக்கிறேன். இந்த மாற்றமும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த உதாரணத்தினைக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் அசலைப் போல நன்றாகவே இருக்கும்).




( இல்லாத புத்ராஜெயா பாலம்  )

எந்த அசலான ஒன்றையும் நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. நம்மில்  யாரோ ஒருவர் மாற்றியே யோசிக்கிறோம். முன்னேற்றகரமான சிந்தனைகளாக அவை அமைந்துவிடுமேயானால், வாழ்க்கையின் சிகரத்துக்கே நாம் சென்று விடுகிறோம்.

தமிழ் நாட்டின் (சென்னை)  'பரோட்டா' ரொட்டி நமக்கு ரொட்டி 'சானாய்' ஆனதும்,  அதே ரொட்டி சானாய் பதப்படுத்தப்பட்டு 'ரெடி மேட்' ஆக அனைவருக்கும் கிடைக்கும் விதம் கடைகளுக்கு வந்ததும் இந்த வித்தியாசமான சிந்தனையில் உதித்ததே.

இப்போது அதிரசம், வடை என பலவும் அப்படி வீட்டுக்கு வாங்கி வந்து உடனே சமைத்துச் சாப்பிட கிடைக்கின்றன. 'இன்ஸ்டன்" எனும் சொல் எப்படி நம்மவர்களின் ஆளுமைக்கு உட்படுத்தப்படுகிறது பாருங்கள்.

இந்த திடீர் உணவுகள் மட்டுமின்றி, உணவைப் பரிமாறும் வாழை இலையும் இப்போது பேப்பர் இலை என புதுமைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்து விட்டது.

சுத்தமாகவும், இயற்கையோடு ஒன்றிப்போகும் அம்சமாகவும் இந்த காகித  இலைகள் இருப்பதாக உணவக உரிமையாளர்கள் சொல்வது இந்த புது யுக்தி வெற்றிபெற்றுவிட்டதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.

 இதுபோல இன்னும் எத்தனையோ நம் பயன்பாட்டில் உள்ளன. ஒரு சிலரால் மட்டுமே இது போன்ற மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உயிரூட்ட முடிந்தாலும், அனேகமாக நாம் அனைவருக்கும் ஏதாவதொன்று மின்னல் கீற்றாக நம் மனத் திரையில் ஒடியிருக்கலாம். அதை நடைமுறை படுத்துவதில் தான் நாம் பின் தங்கி விடுகிறோம்.

Saturday 10 September 2011

உள்ளம் கவர்ந்தவை...

பாடல்கள் புகழ் பெறுவதற்கு இசையமைப்பாளர்கள் மிக முக்கிய காரணம்.
டி ஆர் பாப்பா, கே வி மகாதேவன், குமார், விஸ்வநாதன் ராமமூர்த்தி இப்படி எல்லோரும் பாராட்டுக்குறியவர்களே. . .

தங்கள் பெயரை நிலை நிறுத்தும்படியான பல பாடல்களை அவர்கள் விட்டுச்சென்றிருக்கின்றனர். காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள் அவை.


நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ
என்ன சொல்லி விட்டேன் ஏன் மயங்குகிறாய்

செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி
கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி
சுகம் ஊறிவிட்டதடி.. முகம் மாறிவிட்டதடீ..
நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று ஏன் வந்ததடி
என்ன …. என்ன … என்ன……..

………. நான் என்ன சொல்லி விட்டேன்…………

மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ
மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும்
உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ
கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ
நாம் பழகபோகும் அழகை எல்லாம் படம் பிடித்தாயோ
என்ன… என்ன.. என்ன…

………. நான் என்ன சொல்லிவிட்டேன்…………   

-----------------------0---------------0------------------


மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை
ஒரு விதையில்லாமல் பயிரில்லை
உழைப்பில்லாமல் உலகில்லை
உன் உறவில்லாமல் நானில்லை

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே   


-------------0----------------0----------------


காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன
அவன் வருவதினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன
பொழுதது? கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ
ஒரு தலைவனை அழைத்து ? தருகின்ற மனதல்லவோ.. தருகின்ற மனதல்லவோ

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன
இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன
என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன
… மயக்கத்தை கொடுப்பதென்ன

காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
லா.. ல..லால்லா..லால்லல்லா……..


--------------0----------------0----------------

யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ

சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்கவைத்தாளோ…
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ..

முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழை மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ

ஆஹா ஆஹா ஆஹா…ஹா ஹாஹா….
ஓஹோ…ஓஹோ…..ஓஹோ….ஹோ…ஹோ…ஹோ…

Specials of Keeran, Usha, Mohan and Aunty







Saturday 3 September 2011

ஈமெயில் அனுப்பிய எல்லோருக்கும் எனது நன்றிகள். . .

ஒரு வாரத்திற்கு பின் இன்றுதான் என்னுடைய ஈமெயிலை திறந்தேன். ஹரி ராயா விடுமுறையில் சரியாக ஈமெயிலைக்கூட பார்க்கமுடியாத ஒரு சூழ்நிலை. 

பினாங்கு, தைப்பிங் என சுற்றுப்பயணத்தில் சுவாரஸ்யமாக நேரம் ஓடிவிட ஈமெயில் பார்ப்பது தள்ளிப்போய் விட்டது.
நிறைய பாராட்டுக்கடிதங்கள். 
"மீண்டும் மீண்டும் பார்த்து அதிசயிக்கிறோம், எப்படி இது போன்ற இரட்டைவேட புகைப்படங்கள் எடுக்க முடிகிறது என்று".



"நகைச்சுவையாக இருக்கும் சில படங்களைப்பார்த்து நாங்கள் அடிக்கடி சிரித்துக்கொள்வதுமுண்டு".

"நன்றாக செல்கிறது உங்களின் இந்த "டபல்ஸ்" புலொக்ஸ்பொட், வாழ்த்துக்கள்."
என பலரும் பாராட்டுவது எனக்கு புதிதான ஒன்றல்ல என்றாலும் அவை ஈமெயிலில் வரும்போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
"எப்படி இந்த மாதிரி புகைப்படங்களை எடுக்கிறீர்கள்...?"

"நீங்கள் உபயோகப்படுத்தும் சொப்ட்வேர் என்ன...?
"எங்களாலும்  இதுபோல் செய்ய இயலுமா?"

"நீங்கள் உங்களின் இந்த தனித்திறமையை எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அதற்கு ஏதேனும் கட்டணம் உண்டா? "
என்பது போன்ற கேள்விகள் அதிக அளவில் வரத்தொடங்கி விட்டன இப்போது. மிக விரைவில் இதுபோன்ற வித்தியாசமான படங்களை எப்படி எடுப்பது என்பதை உங்களுக்கு விளக்குவேன்.

உங்களின் கடிதங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் பதில் சொல்ல இயலவில்லை.  "கடிதங்கள்" என்று தலைப்பிட்டு அவ்வப்போது இங்கேயே விளக்கிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதுவரை எவ்வித கட்டணமும் இதற்கு இல்லை. ஈமெயிலில் கேட்போருக்கு இனாமாகவே விளக்கப்படங்களின்றி சொல்லிக்கொடுத்து வருகிறேன். ( இதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகும் போது ஒருவேளை எனது எண்ணம் மாறலாம்.)
ஈமெயில் அனுப்பிய எல்லோருக்கும் எனது நன்றிகள்.
- ராஜ்பாவ்