Monday 22 May 2017

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் பிடித்தது...

மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் உங்களுக்குத் பிடித்தது எது என ஒரு நண்பர் என்னிடம் வினவினார். அருமையான கேள்வி.
இளம் வயதில் அப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்த புத்தகங்களில் சிலவற்றை படித்திருக்கிறேன். பெயர் தெரியா எழுத்தாளர்களாகவே அவர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, 'ரோமுக்கு அப்பால்...", துப்பறியும் புதினம்.
ஆனாலும் நான் மொழிபெயர்ப்பதில் வல்லுனர்களான பலரின் புத்தகங்களை படித்ததில்லை. எனக்கு பிடித்தது... நான் ரசித்தது... ரா.கி.ர எனும் காலஞ்சென்ற குமுதம் உதவி ஆசிரியர், அய்யா ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்களை மட்டுமே.
''லாரா'', ''ஜென்னிபர்'', ''தாரகை'' போன்ற சிட்னி செல்டனின் நாவல்கள் இவர் கைப்பட தமிழில் புகழ் பெற்றன. அதிலும், அவரின் ''பட்டாம் பூச்சி'' ஒரு இமையம். அதற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பேன் நான்.

Image may contain: 1 person, eyeglasses

ஆங்கில நாவலையும், தமிழிலில் வெளிவந்த மொழிபெயர்ப்பையும் படித்திருந்ததால், ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்தெந்த பகுதிகளில் கவனத்தை செலுத்த வேண்டும் எனும் நுணுக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது.
மூல ஆசிரியர் ஹென்றி ஷாரியார் கதைக்கருவில் இருந்து அவர் நழுவிடவில்லை. ஆயினும், நாவல் நடையினில் அப்படி ஒரு சுதந்திரத்தை அய்யா ரா.கி.ர கையாண்டார். இதை வெட்டலாமா, அதை சுருக்கலாமா என அவர் யோசித்தது கிடையாது. நாவலின் சுவாரஸ்யம் கருதி இரண்டையும் செய்தார். அதனால்தானோ என்னவோ, அவரின் இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனே அவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது.... பட்டாம் பூச்சி நிலைத்து நிற்க காரணமுமாகியது.
மூலப் பிரதியையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் படித்திருந்தாலும், எனக்கு என்னவோ தமிழில் வந்ததே நினைவில் நிற்கிறது.

பட்டாம் பூச்சி நாவலின் ஆங்கில அசலை எழுதியவர்.

1973ல் திரைப்படமாக வந்த போது....

ஜெயமோகன் பலரும் அறிந்த நல்ல எழுத்தாளர். அவரின் பார்வையில் நாவலும், திரைப்படமுமாக ஒரு விமர்சனத்தை ''பட்டாம் பூச்சியின் சிறகுகள்'' என ஆகஸ்ட் 29, 2014\ ல் தந்திருந்தார். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். http://www.jeyamohan.in/7939#.WSLsMeuGOM8

Thursday 18 May 2017

பிரம்மகுமாரிகள் பென்ஸ்...


சிவ பாபா இவ்வுலகிற்கு 
ஓம் எனும் மந்திரத்தை 
பிரம்மாவின் கமலவாய் மூலமாக 
கூறிக்கொண்டு வந்தார்.

Saturday 13 May 2017

பவர் பாண்டியும் அன்னையர் தினமும்....


பவர் பாண்டி பார்த்தேன். 
தந்தையர் தினத்துக்கு ஒரு அருமையான படம்.
உலகில் 90 விழுக்காட்டினர் தாய்க்குலம் பற்றியே பேச, இப்படி அரிதாய் ஒரு சில படங்கள் தந்தையருக்காக ஆதரவளிப்பது சந்தோசம் தருகிறது.... ( சமுத்திரக்கனியின் அப்பா படமும் சூப்பர்).

ஆனாலும் நாளைக்கு அன்னையர் தினம்...
நமக்கு இப்போ ஒரு கேள்விங்க....

தாயையும் தந்தையையும்
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு,
எங்கோ, எப்படியோ போகட்டும் எனும்
 கருணையற்ற அரக்கர்களே....
மண்டைக்குள் மூளைக்கு பதிலாக
மண் கொண்டு திரியும் மண்டுகளே...
உங்க அன்னையர் தின கொண்டாட்டமும்,
தந்தையர் தின கொண்டாட்டமும்
எங்கே... எப்படி....???
ஒன்றை உங்கள் மனதில்
நிறுத்தி வையுங்கள்.
உங்களை தெரிந்த மற்றவர்கள்
பாவப்பட்ட பிண்டமாகவே
உங்களை பார்க்கிறார்கள்.
அதுவே உங்களை வந்தடையும் சாபம்.
பெற்றோரை அனாதைகளாக
துன்பக் கடலில் தவிக்க விடும் யாரும்
நிம்மதியாக இருந்துவிட முடியாது.
அப்படி இருந்துவிட்டால்,
தார்மீக பொறுப்புகளுக்கு
அர்த்தமின்றி போய்விடும்,
தர்மதேவதை தோற்றிடுவாள் ....
அதே நேரம்,
பெற்றெடுத்த பிள்ளை
கைவிட்டாலும்,
சொந்த தாயாய், தந்தையாய்
கருணையுடன் பராமரிக்கும்
நல்லுள்ளங்களுக்கு,
பெருமைகளும் புண்ணியங்களும்
கோடி கோடியாய் சென்று சேரட்டும்.

Thursday 11 May 2017

திரு.அசன்கனி, மலேசிய வானொலி ...

நமதினிய நண்பர் அண்ணன் பில்மோர் பலசேனா அவர்கள் மலேசிய கலைஞர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர். அந்த நாளில் இருந்து, இன்றுவரை புகழ்பெற்ற பல முன்னணி உள்ளூர் கலைஞர்களின் பெயர்கள் அவரது முகநூல் பட்டியலில் இருக்கும்.

முகம் தெரியாது, குரல் கேட்டு வளர்ந்தவர்கள் தங்களின் அபிமான கலைஞர்களின் அடையாள படங்களை இவர் பக்கத்துக்கு வந்து பார்க்கலாம்.
அப்படி பார்த்ததும், எனது மனதில் பல மலரும் எண்ணங்களைத் தந்தது, அன்றைய நட்சத்திரக் கலைஞர்களில் ஒருவரான ஐயா திரு.அசன்கனி அவர்களின் அடையாள படமாகும்.

Image may contain: 1 person, standing, tree and outdoor

தனியார் வானொலி நிலையங்களை போலில்லாமல் தார்மீக அடிப்படையில் தமிழ் வளர்க்கும் பொறுப்பு மலேசிய அரசின் வானொலிக்கு என்றென்றும் உண்டு.
ஐயா திரு.அசன்கனி அவர்களின் காலத்தின் போது பணியாற்றிய அன்றைய மூத்த கலைஞர்கள் எவ்வித பிசிறுமின்றி தமிழின் உச்சரிப்பினால் சிகரம் தொட்டனர். ( எல்லோரையும் பட்டியலிட இடம் போதாது. அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம் )

ஊதியத்துக்கான பணிதான் என்றாலும், அன்று தங்களின் பிரமிக்க வைக்கும் திறமைகளினால் மின்னியவர்கள் பலர். அந்த வகையில், செய்திகள், நேரடி வர்ணனைகள், கலந்துரையாடல்கள் என நம்மை அசத்திய மதிப்புக்குரிய அசன்கனி அவர்களை நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.

Image may contain: 1 person, outdoor

தனது சகோதரர் மைதீ சுல்தானுடன், நவீன், ராம்பாபு எனும் கதாபாத்திர படைப்புகள் வானொலி நாடக உலகில் உச்சம் பதித்தன. அதன் எழுத்தாளர் எஸ்.வைரக்கண்ணு அவர்களின் மூன்று வார தொடரான, 'நான் என்றால் அது நீயும் நானும்', ஐயா திரு.அசன்கனி அவர்களின் நடிப்பில் எனக்கு
பிடித்த ஒன்றாகும்.

வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்....
( எனது முகநூலில் மே 4 இடம்பெற்ற பதிவிது. )

மலேசிய பிரம்மகுமாரிகள் மையம்...




கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 
மலேசிய பிரம்மகுமாரிகள் அமைப்பின் 
சந்திப்பின் இறுதியில் 
தேசிய ஒருங்கிணைப்பாளர் 
சகோதரர் இலட்சுமணன் அவர்களுடன் 
விசாபென், சுலோச்சனாபென் 
மற்றும் சில இளம் நடனக் கலைஞர்கள் 
எடுத்துக் கொண்ட படம்.

- எனது முகநூலில் மே 5 இடம்பெற்ற  பதிவிது.

சராசரி மனிதனின் ஆன்மிக கேள்விகள்...

மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?
பின் ஏன் சுவர்க்க நகரங்களை அடைகிறார்கள்?
எந்த பாவம் தலை கேட்கும்?
எந்த புண்ணியம் தலை காக்கும்?
இறக்கும்வரை யாரை நினைக்க
நற்கதி பெறலாம் ?
பாவ நிவர்த்திக்கு என்னென்ன செய்வது?
நல்ல இறப்புக்கு செய்யவேண்டுவது எவை ?

ஆன்மிக பரவசத்தில் திளைப்போருக்கு இக்கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், அவர்கள் வேடதாரிகளாவர். தெரிந்தது போல நடிப்பவர்கள்.


சரி பதில்கள் எங்கே கிடைக்கும்..?
-  சிறுதெய்வ வழிபாட்டை தவிர்ப்பவர்களிடம்.
-  மானுடர்கள் தெய்வங்களாக மாட்டார்கள் என நம்புவர்களிடம்.
-  வேத நூல்களை தேடிப்போய் கற்பவர்களிடம்.

- எனது முகநூல் பதிவிது  )

எதுவுமே விளங்காதவரைதான்...

ஒரு விசயம் மட்டும் உண்மை. பலரும் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு பல சோதிடர்கள் குளிர் காய்கிறார்கள்.

ஒரு கதை...
அதிகாலையில் இரு காக்கைகளை கண்டால் கைமேல் பலன் என ஒரு அரண்மனை சோதிடர் சொல்ல, அதனை உத்தரவாக பிறப்பித்தார் அரசர்.
ஒரு நாள் காலை, அரண்மனைக்கு அருகாமையில் இரு காக்கைகளை ஒரு சேவகன் கண்டான். மன்னரிடம் தெரிவித்தால் தமக்கு ஏதாவது பணமுடிப்பு கிடைக்கும் என்ற ஆசையில் ஓடிவந்து தெரிவித்தான்.

Image may contain: bird and sky

மன்னர் அந்த காக்கைகளை  பார்க்க கிளம்பினார். அங்கு போய் பார்க்கும்போது, ஒன்று மட்டுமே கிளையில் உட்கார்ந்திருந்தது. மன்னருக்கு கோபம். சேவகனை சவுக்கால் அடிக்க ஆணையிட்டார். இதனைக் கேட்ட சேவகன் சிரிக்கத்தொடங்கிவிட்டான். அனைவருக்கும் ஆச்சரியம்.

அவனது பதிலை எதிர்பார்த்து அரசன் திரும்ப,
" மன்னா, இன்று காலை நான் மட்டுமே அந்த இரண்டு காக்கைகளை கண்டேன். உடனே பலன் கிடைத்துவிட்டது...." என வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

அரசருக்கு விளங்கிவிட்டது. தண்டனையை நிறுத்தினார். உடனே அவசரமாக அரண்மனைக்கு திரும்பினார், சோதிடனுக்கு சவுக்கடி வழங்க....

எதுவுமே, விளங்காதவரைதான்.
விளங்கிடும்போது, குளிர்காய்ந்தவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில்....

- என்னுடைய முகநூல் பதிவிது.