Saturday 13 May 2017

பவர் பாண்டியும் அன்னையர் தினமும்....


பவர் பாண்டி பார்த்தேன். 
தந்தையர் தினத்துக்கு ஒரு அருமையான படம்.
உலகில் 90 விழுக்காட்டினர் தாய்க்குலம் பற்றியே பேச, இப்படி அரிதாய் ஒரு சில படங்கள் தந்தையருக்காக ஆதரவளிப்பது சந்தோசம் தருகிறது.... ( சமுத்திரக்கனியின் அப்பா படமும் சூப்பர்).

ஆனாலும் நாளைக்கு அன்னையர் தினம்...
நமக்கு இப்போ ஒரு கேள்விங்க....

தாயையும் தந்தையையும்
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு,
எங்கோ, எப்படியோ போகட்டும் எனும்
 கருணையற்ற அரக்கர்களே....
மண்டைக்குள் மூளைக்கு பதிலாக
மண் கொண்டு திரியும் மண்டுகளே...
உங்க அன்னையர் தின கொண்டாட்டமும்,
தந்தையர் தின கொண்டாட்டமும்
எங்கே... எப்படி....???
ஒன்றை உங்கள் மனதில்
நிறுத்தி வையுங்கள்.
உங்களை தெரிந்த மற்றவர்கள்
பாவப்பட்ட பிண்டமாகவே
உங்களை பார்க்கிறார்கள்.
அதுவே உங்களை வந்தடையும் சாபம்.
பெற்றோரை அனாதைகளாக
துன்பக் கடலில் தவிக்க விடும் யாரும்
நிம்மதியாக இருந்துவிட முடியாது.
அப்படி இருந்துவிட்டால்,
தார்மீக பொறுப்புகளுக்கு
அர்த்தமின்றி போய்விடும்,
தர்மதேவதை தோற்றிடுவாள் ....
அதே நேரம்,
பெற்றெடுத்த பிள்ளை
கைவிட்டாலும்,
சொந்த தாயாய், தந்தையாய்
கருணையுடன் பராமரிக்கும்
நல்லுள்ளங்களுக்கு,
பெருமைகளும் புண்ணியங்களும்
கோடி கோடியாய் சென்று சேரட்டும்.

No comments:

Post a Comment