Tuesday 31 January 2012

அன்றைய பாடல்கள். . .துன்பம் நேர்கையில்


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்

இது இல்லை, பாடு,, கண்ணே சரிதானான்னு கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறாமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

( இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன், பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா,  திரைப்படம்: ஓர் இரவு....மேலே உள்ள படங்கள், யூ டியூபில் இருந்து )

Sunday 29 January 2012

ஆண் துணையின்றி பெண்கள். . .

பெண்கள் ஆண் துணையின்றி இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியுமா? பலரும் கேட்கும் கேள்வி இது.... முடியும்.... ஆனால், மிகவும் சிரமமான ஒன்று இது. பெருமளவு தைரியமும், அசாத்திய தன்னம்பிக்கையும் வேண்டும்.

பெண்களுக்கு ஒரு பாதுகப்பு வேலி போன்றது திருமணம். பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தருவது திருமணமே. மனைவி என்பது பெண்ணுக்குக் கிடைக்கும் ஒரு அங்கீகாரம். சிலர் இதை அடிமைத்தனம் என்கின்றனர்.

அப்படிச் சொல்வது தவறு. ஆண்களில் பலர் அப்படி நினைப்பது கிடையாது. அனால், பெண் முன்னேற்றத்தைப் பொழுது போக்காகப் பேசும் சில அமைப்புகள் இதுபோன்று சொல்லி ஆதரவு கேட்பதுண்டு.

எல்லோரும் வாழ்வோம். . .

 நமது வேண்டுதலுக்கான முழுப்பயன் கிடக்கவேண்டுமானால், இறைவனிடம் வேண்டும் போது '   நான்' , 'எனக்கு' என முதல் கோரிக்கையை வைக்கக்கூடாது என்பார்கள்.

அது போன்ற சுய நல போக்கு இல்லாது, 'இவ்வுலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியமாக சிறந்து வாழவேண்டும'  என நினைப்பது    நாளடைவில் நாம் நம்மை நல்வழிப் படுத்தி மனோத்தத்துவ ரீதியில் நன்மைகளை பெருக்கிக்கொள்ளும் சிறப்பான ஒன்றாகும்.

சுய நலம் தோன்றாத போது பாவங்கள் தோன்றுவதில்லை. பாவங்கள் இல்லையேல் இறைவனின் அன்பு முழுமையாக பெற எவ்வித தடைகளும் இல்லை.

எனவே, மற்றவர் நன்றாக இருக்க நினைக்கும் நேரம் நம் வாழ்வு சிறப்படைகிறது என்பதை உணர்வோம்.

எல்லோரும் சீரும் சிறப்பும் பெற்று ஆரோகியமாக வாழவே வேண்டுவோம்.

Friday 27 January 2012

இப்படியும் நண்பர்கள். . .

 நண்பர்கள் பலவிதம். அதில் சிலர் நன்றாக கதை சொல்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொல்லும் எதுவும் சுவாரஸ்யம் குறையாமல் நிறைய 'சஸ்பென்ஸ்' கலந்து இருக்கும். இப்படி எதையும் ரசித்துச் சொல்வது அவர்களின் பிறவிக் குணம். பொதுவாக இவர்கள் பொய் கலப்பில்லாமலே சொல்வார்கள்.

இவர்களில் இருந்து வேறுபட்டவர்களாக இன்னொரு பிரிவினரும் நமது நண்பர்கள் வட்டத்தில் இருப்பர். இவர்கள் கதை சொல்லமாட்டார்கள், கதை விடுவார்கள். வாயிலிருந்து வரும் எல்லாமும் கூட்டிக் குறைத்து தனது சுய இலாபத்துக்காகவே  இருக்கும்.

பலர்  நம் காதில் பூ சுற்றுபவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் பெரிய பூ மாலையையே நம் காதில் சுற்ற முயலுவார்கள். இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் அவர்களுடனான நட்பு முறிந்து விடும்.

இது போன்ற நேரங்களில்  நம் நகைச்சுவை உணர்வே நட்பைக் காப்பாற்றும் யுக்தியாகிறது.

Sunday 22 January 2012

எங்கேயும் எப்போதும் . . .

எங்கேயும் எப்போதும் என்னும் ஒரு நல்ல அருமையான திரைப்படம் இப்போது அஸ்ட்ரோ அலைவரிசையில் இடம்பெற்று வருகிறது.

சாலை விதிகளை மீறுவதனால் நிகழும் கோர விபத்துகளையும் அதனால் பல குடும்பங்களில் ஏற்படும் சோகங்களையும் நம் மனக்கண் முன்னே கொண்டுவருகிறது இப்படம்.



 வெறும்  ஒரு விபத்தை மட்டுமே சித்தரிக்கும் சோகமான செய்திப்படம் போல இல்லாமல் முக்கியமான இரு இளம் ஜோடிகளை வித்தியசமான முறையில் காதல் வயப்பட வைத்து நகைச்சுவையோடு காட்ச்சிகளை படமாக்கி இருக்கின்றனர்.

ஒரு சில வினாடிகளின் அவசரம்தான் பல விபத்துக்களுக்கு மூல காரணம் என்று சொல்கிறார்கள். நாம் நிதானமாக எவ்வித டென்ஷனும் இன்றி பயணத்தை தொடங்கி, எல்லா சாலை விதிகளையும் மதித்து பின்பற்றி நடந்தோமானால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்கிறார்கள்.

திருச்சியிலிருந்தும் சென்னையிலிருந்தும் கிளம்பும் இரு பஸ்கள் நேருக்கு நேரே மோதிக்கொள்கின்றன. அதில் பயணம் செய்வோரில் யார் யார் இறக்கின்றனர், யார் யார் பிழைக்கின்றனர், அவர்களின் குடும்பத்தார் படும் வேதனைகள் ... இவற்றை இப்படம் விளக்குகிறது.

விபத்துக்கு முன்னர் பயணிப்பவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பனை இடை இடையே வரும் காட்ச்சியமைப்புகள் காட்டுகின்றன.
அஞ்சலி ஒரு தைரியமான பெண். ஜெய் ஒரு பெண்ணைப்போல் கூச்சப்படும் ஒரு ஆண். இவர்களுக்குள் ஒரு காதல்.


திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் கிராமத்துப் பெண் அனன்யா. இவருக்கு உதவி செய்ய வருகிறார் சர்வா. இவர்களுக்கும் காதல், ஆனால் கடைசி நேரம்தான் சொல்லிக்கொள்கிறார்கள்.


"இங்கே வா ... அங்கே வா" என ஜெய்யை அலைய வைக்கும் அஞ்சலி நன்றாக செய்திருக்கிறார் அவர் பாத்திரத்தை. அதேபோல, ஜெய்யும் ஒரு அப்பாவியான கேரக்டரில் டொப் மார்க்ஸ் வாங்கியிருக்கிறார். சிரிப்புக்கு பஞ்சமில்லாத காதல். முடிவு தெரியும் வரை ரசிக்கிறோம். பின்பு மனம் கணக்கிறது...

சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சர்வா, திருச்சி பெண் அனன்யாவிற்கு உதவும் சூழ்நிலையில் அனன்யாவின் வெகுளித்தனமான, யாரையும் உடனே நம்பிவிடாத குணம் கண்டு மனதுக்குள் விரும்புகிறார். இருவரும் பிரிந்து மீண்டும் 6 மாததிற்குப்பின் கூடும் போது நிகழும் விபத்தே இப்படத்தின் கிளைமாக்ஸ்.

இதற்கிடையே,
புது மனைவியை விட்டுப்பிரிய மனமில்லாத ஒரு கணவன்,
பஸ்ஸில் முதன்முறை சந்திக்கும் ஒரு காலேஜ் பையனும் பெண்ணும், டுபாயில் வேலை செய்துவிட்டு இனி குடும்பத்தோடு  இனிதே வாழலாம் என்று வரும் ஒருவருக்கு அவரின் சிறு குழந்தை "வாங்கப்பா" என ஏங்கித்தவிக்கும் செல்பொன் அழைப்புக்கள்,
இறங்கும் இடம் வந்தும் அஞசலியையும் ஜெய்யையும் இறங்கவிடாமல், "என் மகன் கார் கொண்டுவந்திருகிறான். அடுத்த பஸ் நிறுத்தத்தில்  இறங்கிக்கொள்ளலாம் தம்பி" என உதவிக்கரம் நீட்டும் பெரியவர்....
இப்படி காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக நகர்த்திச்செல்கின்றன.

இடம்பெறும் பாடல்களும் காட்ச்சிகளோடு பார்க்கும் போது மிகப் பொருத்தமாக பிரமாதமாக இருக்கின்றன. மொத்தம் 5 பாடல்கள்...அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித் தன்மையோடு இடம் பெற்றிருக்கின்றன.
 எனக்கு மிகவும் பிடித்தவை இரண்டு.
ஒன்று, "கோவிந்தா கோவிந்தா, சென்னையில புதுப்பொண்ணு"
மற்றது, "அவன் பேரே தெரியாது.."

சாலை விபத்துக்களில் திடீரென  உயிரிழக்கும் சொந்தங்களை எண்ணி கதறும் நாம், வாழ்வில் மரணம் எவ்வளவு நிச்சயமானது என்பதை உணருவதே இல்லை.

"நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருப்போர் நாளை இல்லை"...என்பது பழைய வாக்கியம்.
 "சற்று முன் இருந்தோர் இப்போதில்லை, இப்போதிருக்கும் நாம் இன்னும் சிறிது நேரத்திற்குப் பின் இருப்போம் என்பது நிச்சையமில்லை"
...என்பதே புதுமொழியாக இருக்க வேண்டும்.
இப்படம் அதைத்தான் உணர்த்துகிறது.

 நோயால் போவோர் பாதியும் விபத்தால் போவோர் மீதியுமாகவே காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது.

இதற்கிடையே நமக்குள்தான் எவ்வளவு பேதங்கள், பாகுபாடுகள்.
"இன்றே உனது கடைசி நாள் என வாழ்..."
என்று சான்றோர் சொல்லிச்சென்றதன் உண்மை இதுதானோ???

Friday 20 January 2012

Ahoii...We are going 3D from now on....

Times are changing and we are expected to adapt to the current trend according to evolution in technology.

In our case, we are going from dual role pictures to 3D photos from now....
 ( some samples are given here and u need a special 3d glass to view this )

Thursday 19 January 2012

ஐ.என்.ஜி தமிழ் காப்புறுதி மாநாடு 2012


ஐ.என்.ஜி தமிழ் காப்புறுதி மாநாடு 2012 இன்று தொடங்கி 22ம் தேதி வரை கெந்திங் மலையில் நடைபெறுகிறது.

இதில் நம் பகுதியைச் சேர்ந்த திரு ரமேஷ் சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார். முதல் மூன்று ஏஜென்டுகளில் முதலாம் நிலையில் வந்து சாதனையாளராக திகழ்கிறார்.

இதன் உண்மை என்னவென்றால், அவரால் பல குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை சரி செய்து ஒரு வலிமையான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பதே.

உயர்ந்துகொண்டுபோகும் மருத்துவச் செலவுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு அட்டையை பெற்றிருப்பது அவசியம்.

சின்னதாக நாம் இப்போது செலவிடும் ஒரு தொகை பின்னர் பல லட்சம் வெள்ளி மதிப்பிலான மருத்துவ சிகிச்சைக்கு பெறும் பங்காற்றவிருப்பதை நாம் முன்கூட்டியே உணரவேண்டும்.

குடும்ப பொருளாதார திட்டமிடுதலில், காப்புறுதிக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களின் வருமானத்திலிருந்து வருடம்தோரும் தனியாக ஒதுக்கிவிட வேண்டியது குடும்பத்தை நல்ல வழியில் கொண்டுசெல்லும் தலைவர் அல்லது தலைவியின் கடமையாகும்.

அடுத்தவர் உதவியை எதிர் நோக்கி வாழ்வது நம் கஷ்ட்ட காலங்களில் நம்மை மன உலைச்சலுக்கு ஆளாக்கும்.

Wednesday 18 January 2012

6 DIFFERENCES IN KUMUDAM


சீரியஸாக ஏதும் செய்யத் தோன்றாத நேரங்களில் இப்படி சுலபமான "கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்" போட்டிகள் நமது நினைவகத்தை புதுப்பிப்பதோடு நம் உடலையும் புத்துணர்ச்சிபெற உதவுகிறது.

இந்த ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது சுலபம்தான், உங்களுக்கு பத்து நிமிடங்கள் இருந்தால். 

ஆனால், போட்டி அதுவல்ல. படத்தை பார்த்துக்கொண்டு வரும் ஒரே ரவுண்டில் வித்தியாசமான ஆறு விஷயங்களையும் நீங்கள் கண்டு பிடிக்கவேண்டும். முதலில் ஐந்தையும் பின் இரண்டாவது சுற்றில் மீதம் உள்ள ஆறாவதையும் கண்டு பிடிப்பது வெற்றியாளர்கள் பட்டியலில் உங்களைச் சேர்க்காது.

இந்த 6 வித்தியாசங்களை கண்டு பிடிக்கும் விளையாட்டினை வேறு விதமாகவும் விளையாடலாம். 30வினாடிகளில் எல்லா வித்தியாசங்களையும் கண்டுபிடித்து விட வேண்டும். முடியுமா உங்களால்....?





 

Sunday 15 January 2012

30 minutes a day keeps the doctors away. . .

My doctor friend used to say that our health is about 3 km away. I didnt know what he was trying to say till I came across this in one health megazine. With my current health condition I take about 30 minutes to cover a distance of 6 km. And I feel so good after each session.

I feel every one should pay attention to habits like brisk walking, good food and healthy thoughts to keep them fit and happy always. They should also include scrabble, chess and sudoku to make their brain in top form all the time.

Saturday 14 January 2012

பொங்கல் வாழ்த்துக்கள். . .

இயற்கையை விரும்பும் அனைவரும் கொண்டாட வேண்டியது பொங்கல்.

இங்கே இந்த பதிவுலகத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சூரியனுக்கு நன்றி சொல்லி இயற்கையை மீராமல் வளமோடு வாழ்வோம்.

Wednesday 4 January 2012

வெட்டி ஒட்டப்படும் படங்கள் . . .

இவை நிச்சயம் வெட்டி ஒட்டப்படும் படங்கள் தான்.... ஆனால் எங்கே வெட்டப்பட்டன எங்கே ஒட்டப்பட்டன என்பது தான் கேள்வி....


படித்ததில் பிடித்தது...

விடிகாலை நீ தூங்க
விண்மீனில் விளக்கு வைப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்.

சுடிதாரில் கண்ணாடியா?
வைரம் வாங்கி பதிச்சி வைப்பேன்
சலூனுக்குப் போகனும்னா
சிங்கப்பூர் அனுப்பி வைப்பேன்.

சாதா டிவி போரடிச்சா
சன் டிவி கனெக்க்ஷன் வைப்பேன்
சுந்தர ராமசாமி
சுஜாதா புக்கு வாங்கி வைப்பேன்.

சனிக்கிழமை சாயங்காலம்
ஸ்டார் ஓட்டல் கூட்டிப்போவேன்
சினிமாதான் வெனுமுன்னா
ஹோம் தியேட்டர் கட்டி வைப்பேன்.

மெட்ரோ வாட்டர் வேணான்டி
நெய் ஊத்தி சமைக்கச் சொல்வேன்
மாசத்துல முப்பது நாள்
பட்டுப் புடவை எடுக்கச் சொல்வேன்.

டவுன் பஸ்ஸில் கூட்டமடி
டாடாசுமோ அனுப்பி வைப்பேன்
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான்குட்டி வளர்க்கச் சொல்வேன்.

என்றெல்லாம் வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்டி
என் சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ள வாழலாம் வா....

( கவிஞர் நா.முத்துக்குமார் குறுந்தொகை எனும் தொடரில் 'அனா... ஆவன்னா...' தலைப்பின் கீழ் எழுதியது இது. நான் படித்து ரசித்ததை இங்கே உங்களுக்கும் படிக்கத் தந்துவிட்டேன். )

துணிந்து நில்...தொடர்ந்து செல்....

"நம்மால் முடியுமா" என்று நாம் கேட்கலாமா? 

பலருக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. ஏதோ ஒவ்வொரு நாளும் விடிகிறது, முடிகிறது என்பது போன்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எவ்வித பிரச்சினையுமின்றி வழக்கம் போலவே ஒவ்வொரு நாளும் தோன்றி மறைந்தால் போதும் என்ற எண்ணத்தில் மற்ற எந்த முன்னேற்றகரமான முடிவுகளையும் எடுக்க தயங்குகின்றனர்.

'மெடிக்கல் கார்ட்டை' மற்றவர்களுக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய நேரங்களில் எடுக்காமல் போன சரியான முடிவுகளை அடையாளம் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியதுண்டு.  தொழில் மாற்றம், இட மாற்றம் மற்றும் பிள்ளைகளின் கல்வி நலன்களில் மாற்றங்களைச்செய்ய மிகவும் பயப்படுகின்றனர்.

ஒரு வகையில் அவர்களை குற்றம் சொல்ல முடியாதுதான். இன்றைய சூழ்நிலை அவர்களின் மன நிலையை மாற்ற இயலாது. இருப்பதை விட்டு அனாவசிய திடீர் முடிவுகளை எடுப்பது பாதகமாக இருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கின்றது.

ஆனாலும், வாழ்வின் முக்கியத்துவங்கள் யாவை என அறிந்து, அவற்றைப் பட்டியலிட்டு அவற்றிற்காக ஒரு சில மாற்றங்களைச் செய்வதிலும் சாமர்த்தியமான திறமை தேவை. 

எதிலும் ஒரு சுணக்கம், எதிலும் ஒரு தயக்கம் நம்மை ஒரு போதும் வாழ்வின் மேல் நிலைக்கு கூட்டிச்செல்லாது.

 'நம்மால் முடியுமா?' என்று கேட்டுக்கொள்ளும் அதே நேரம் முடியுமென்று படுவதை திறந்த மனதுடன் வெற்றிக்கு முதல் படியாக நினைத்து செயல் படுவத்துவோரில் பலர் வெற்றியே அடைகிறார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை. . .
தயங்கியவர் வென்றதில்லை. . .

Kumudam covers - March 2012




Sunday 1 January 2012

தேவாரம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

-------0----------0-----------0-----------0---------0---------------
(தேவாரப் பாடல்கள் பக்திக்கு மட்டுமல்ல நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் இருந்திருக்கின்றது அன்று.  வயிறு சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு "குற்றாயினவாறு" என்னும் தேவரப்பாடல் இறைவனிடம் நாம் போடுகின்ற நல்லதொரு விண்ணப்பம். என்னை வாட்டுகின்ற நோய்களிலிருந்து காத்து அருள் புரிவாய் ஐயா என்று சரணடைவோம். )

கூற்றாயினாவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடகியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில
வீரட்டான துறை அம்மானே

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பழிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அளந்தேன் அடியேன் அதிகை கெடில
வீரட்டான துறை அம்மானே

- திருநாவுக்கரசர்

happy newyear 2012. . .


Once again we are into a new year.  Well, this may sound like a broken record, complaining end of each year or beginning of it that the year flew by too fast.  Those who have been following me through function corners would have noticed that. But thats how I feel exactly . Each year flying past me with super speed.  I cant believe how quickly life is passing by....

Wishing all my blogspot followers a happy and healthy newyear 2012...may god bless you with all that you ask for this year!!!
( protect yourself from the escalating costs of medical healthcare. . . get ING now!!!)