Sunday 29 January 2012

ஆண் துணையின்றி பெண்கள். . .

பெண்கள் ஆண் துணையின்றி இந்த உலகத்தில் வாழ்ந்திட முடியுமா? பலரும் கேட்கும் கேள்வி இது.... முடியும்.... ஆனால், மிகவும் சிரமமான ஒன்று இது. பெருமளவு தைரியமும், அசாத்திய தன்னம்பிக்கையும் வேண்டும்.

பெண்களுக்கு ஒரு பாதுகப்பு வேலி போன்றது திருமணம். பெண்ணாக பிறந்த ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தருவது திருமணமே. மனைவி என்பது பெண்ணுக்குக் கிடைக்கும் ஒரு அங்கீகாரம். சிலர் இதை அடிமைத்தனம் என்கின்றனர்.

அப்படிச் சொல்வது தவறு. ஆண்களில் பலர் அப்படி நினைப்பது கிடையாது. அனால், பெண் முன்னேற்றத்தைப் பொழுது போக்காகப் பேசும் சில அமைப்புகள் இதுபோன்று சொல்லி ஆதரவு கேட்பதுண்டு.

No comments:

Post a Comment