Friday 27 January 2012

இப்படியும் நண்பர்கள். . .

 நண்பர்கள் பலவிதம். அதில் சிலர் நன்றாக கதை சொல்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொல்லும் எதுவும் சுவாரஸ்யம் குறையாமல் நிறைய 'சஸ்பென்ஸ்' கலந்து இருக்கும். இப்படி எதையும் ரசித்துச் சொல்வது அவர்களின் பிறவிக் குணம். பொதுவாக இவர்கள் பொய் கலப்பில்லாமலே சொல்வார்கள்.

இவர்களில் இருந்து வேறுபட்டவர்களாக இன்னொரு பிரிவினரும் நமது நண்பர்கள் வட்டத்தில் இருப்பர். இவர்கள் கதை சொல்லமாட்டார்கள், கதை விடுவார்கள். வாயிலிருந்து வரும் எல்லாமும் கூட்டிக் குறைத்து தனது சுய இலாபத்துக்காகவே  இருக்கும்.

பலர்  நம் காதில் பூ சுற்றுபவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் பெரிய பூ மாலையையே நம் காதில் சுற்ற முயலுவார்கள். இதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் அவர்களுடனான நட்பு முறிந்து விடும்.

இது போன்ற நேரங்களில்  நம் நகைச்சுவை உணர்வே நட்பைக் காப்பாற்றும் யுக்தியாகிறது.

No comments:

Post a Comment