Saturday 1 December 2012

நன்றி சொல்வோம் நல்லவர்க்கு. . .

வாழ்வில் நாம் போடும் திட்டங்கள் பலப் பல. அவை அனைத்தும் வெற்றி பெறும் என சொல்லிவிட முடியாது. சில வெற்றி   பெறுவதும்,  சில தோல்வி அடைவதும் இயற்கையே.

அப்படி    வெற்றி பெறும்   நமது திட்டங்களில் மற்றவர் பங்களிப்பும் குறிப்பிடும் அளவுக்கு பல இடங்களில், பல விதங்களில் நமக்கு கை கொடுக்கின்றன என்பதையும் நாம் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

இளக்காரமாக பேசி நம்மை துணிச்சலான முடிவெடுக்க விடாமல், ' முடியுமா இது?' என சந்தேகத்திலும், விரக்தியுலும் தள்ளுவோர் மத்தியில், நம் திட்டங்கள் வெற்றியடைய உதவுபவர்களில் நம் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் பெரிய பங்காற்றுகின்றனர்.

 நமக்கு ஆதரவான, அனுசரனையான சொற்களின் மூலம் நமக்கு புத்துணர்ச்சியூட்டி, நம்மை முன்னோக்கிச் செல்ல துணை நின்றவர்களும், நிற்பவர்களும் அவர்களே.
அவர்களை பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டியது நமது நன்றியறிதலில் ஒன்றாகும்.

No comments:

Post a Comment