Monday 31 December 2012

நீரிழிவு நோய் . . .

“ ஒரு டாக்டர் எனக்கு ( டயபிட்டீஸ் மெலிட்டஸ் ) சர்க்கரை வியாதி இருக்குன்னார். இன்னொருவரிடம் பரிசோதித்தேன், அவர் இல்லை என்கிறார். யார் சொல்வதை நம்புவதென்று தெரியவில்லை” என நம்மைச் சுற்றி உள்ளவர்களில் சிலர் சொல்லக் கேட்டிருப்போம்.

" இருக்கு ....ஆனா  இல்ல..."  நல்ல 'காமிடி பீஸ்' போல தோன்றினாலும் உண்மையில் இது ஒரு கவனிக்க வேண்டிய நிலை. இப்படியும் சில விசயங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கவே செய்கின்றன. 

ஆனால், இங்கே ஒன்றை கூர்ந்து கவனிக்க வேன்டும். மாரடைப்பு, வாதம், விபத்து மற்றும் வைரஸ் தொல்லைகள் போன்றவை நமக்கு ஏற்படும்போது, நம்முடைய தற்காபுக்காக நமதுடல் எட்ரினலினை சுரக்க வைக்கும். இது ஒரு வகை ‘ஹோர்மோன்’. இது தற்காலிகமாக உடலில் உள்ள சர்க்கரை அளவை சீராக இருப்பதிலிருந்து குழப்பி பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ‘ஸ்ட்ரெஸ் ஹைப்பர்கிளைஸீமியா’ என்று பெயர்.

தற்காலிக அறிகுறிகள் தான் என்றாலும், உடலில் ஒளிந்திருக்கும் இந்நிலையால் சர்க்கரை வியாதி நிரந்தரமாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இது மாதிரியான சூழ்நிலைகளில் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை என்கிறார் மருத்துவராக இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவர்.

 நீரிழிவு நோய் 2006ல் மலேசிய மக்கள் தொடையில் 7ல் ஒருவருக்குத்தான் இருந்தது. இன்று அது 5ல் ஒருவருக்கு என ஆகிவிட்டது. இன்னும் சில வருடங்களில் இந்த நிலை மோசமடையும் சந்தர்ப்பங்களும் அறிகுறிகளும் நிறையவே உண்டு.

மக்களின் உணவுப்பழக்கத்தில் மாற்றமில்லாததும், உடற்பயிற்சியில் ஆர்வமைன்மையும், விழிப்புணர்வும் இல்லாததுமே இ ந் நோய் அதிகரிக்கக் கூடிய காரணங்களாகும்.


நீரிழிவு நோய் ஆபத்தானது என காட்டவே மேலே சற்று கொடூரமான அறுவை சிகிச்சை படம். )

No comments:

Post a Comment