Wednesday 30 May 2012

பாசம் என்பது பிறப்பினில்தானா. . .


"பார் மகளே பார் " என்றொரு தமிழ்ப்படம். சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று.

வளர்ந்து பெரியவர்களாகும் இரு மகள்கள். அதில் ஒருவரே சொந்த மகள், மற்றவர் வளர்ப்பு மகளென தெரிய வருகிறது.

இதை மையமாக வைத்து ஒரு பாடல் ... "பார் மகளே பார்" என படத்தின் நடுவே வரும். தந்தையின் தவிப்பை உணர்த்தும் நல்லதொரு பாடல்.

ஆனால், இதே தலைப்பில் திரைப்படத்தின் தொடக்க இசையில் எம் எஸ் விஸ்வநாதன் "பார் மகளே பார்" என தலைப்புப் பாடலை பாடியிருப்பார். அந்தப்பாடலில்தான் தூய உறவினையும் பாசத்தினையும் விளக்கிச் சொல்லும் ஒரு வரி வரும்...

" வாசம் என்பது மலர்களில் தானா
  மனதினில் ஏன் இல்லை....
  பாசம் என்பது பிறப்பினில்தானா
  வளர்வதில் ஏன் இல்லை...?"



 

No comments:

Post a Comment