Monday 7 May 2012

தவற்றினை திருத்தி வாழ்வதே வாழ்க்கை...

தெரியாமல் செய்யப்படுகின்ற பிழைகள் மன்னிக்கப் படுகின்றன, பிழை செய்தவர் மனம் வருந்தி திருந்தும் போது.

ஆனால், தவறெனத் தெரிந்தும் ஞாயப் படுத்த முனைவோர் பகைமையை வளர்க்கும் முதல் காரணவாதியாகின்றனர். வரட்டு கௌரவம் பார்ப்போரும், விதண்டா வாதம் புரிவோரும் இவர்களுள் அடங்குவர்.

"இன்னும் செய்வேன், என்ன பந்தயம்?" எனும் இவர்கள் குணம் இவர்களுக்கு நிரந்தர எதிரிகளையும், இவர்கள் மேல் வெறுப்படைபவர்களையும் அதிகரிக்க வைக்கிறது. அனுதாபம் காட்டுவோரையும் ஆத்திரப்படவைக்கும் குணமுடையோர் இவர்கள். 

தவறிழைத்து விட்டு அதையும் தற்காத்து பேசுவோரைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது என பலரும் சொல்லக் கேட்டிருப்போம்.

திருந்தாத வரை இவர்கள் தனிமரமாக வாழவேண்டியது தான்.

No comments:

Post a Comment