Wednesday 30 May 2012

வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானது.


மழலையாக தொடங்கும் வாழ்வினில் 
மனிதன் மகிழ்வாகவே இருக்கிறான். 
தன்மீது திணிக்கப் படும் 
பல்வேறு எதிர்பார்ப்புகளால் 
பிறகு அவன் நிலை தடுமாறுகிறான். 
தோல்வியில் துவண்டிடும் அவன் 
எண்ணுதற்கறியா குற்றங்கள் புரிந்திட 
மிருகங்களுக்கு ஒப்பாகிறான். 
காலம் காட்டிடும் 
கருணையின் விளைவாக 
நல்வழி திரும்புகிறான். 
திருந்திடும் அவனை 
வாழ்த்திட ஆயிரம் பேர்.....


ஏதோ ஒரு திரைப்படக் கதை போல தெரிகிறது, இல்லையா?
நன்றாக யோசித்திடும் போது, பலரின் வாழ்விலும் இது போல ஏற்ற இறக்கங்கள் இருந்திடக் காணலாம். உடல் வலுவிழந்திடும் நேரம் ''வாய்ச்சவடால்'' வல்லவனும், நல்லவனாகிறான். வந்திடும் விதி நல்லதாய் இருந்திட வேண்டுகிறான்.
பலருக்கும் ஏமாற்றம் தராத முடிவு சிலருக்கு கொடூரமாக அமைந்து, மற்றவருக்கு படிப்பினையைத் தந்துவிடுகிறது.

No comments:

Post a Comment