Tuesday 15 May 2012

பொன்னித்திரு நாள். . .

9.9.1960ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் "பொன்னித்திரு நாள்". ராஜசுலோச்சனா கதா நாயகியாக நடிக்க  G. முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஜோடியாக  நடித்திருந்தார்.

கே. வி. மகாதேவன் இசையில் பி. பீ. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலாவுடன் பாடிய புகழ்பெற்ற பாடல்  இது.


வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே


பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிடு நீ சேர்ந்து பாடுவாய்


ஆண் முகம் காணும் பெண்
மனம் நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ

ஆண் முகம் காணும் பெண் மனம்
நாணம் அடைவதும் ஏனோ
அதிசயம் தானோ


ஆண்மையை வெல்லும் நாணமே
எங்கள் அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ

ஆண்மையை வெல்லும் நாணமே எங்கள்
அணிகலம் அதுவே
துணை பலம் அன்றோ


பாடு கோகிலம் பாடு
பாசமாக நீ பாடு
தேடும் காதலன் ஓடி வந்தனன்
சிந்து பாடிடு  நீ சேர்ந்து பாடுவாய்


நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்

நிலவினை எங்கே காணோம்
இந்த நேரத்திலே தனியாக ஆனோம்

தலை மறைவாகவே
கலை மதி முகமே
சாகசம் செய்வதில் தான் என்ன சுகமே


தொட்டால் குளிரும்
விட்டு விலகினால் சுடுமே காதல் நெருப்பு

தொட்டால் குளிரும்
விட்டு விலகினால் சுடுமே காதல் நெருப்பு

விட்டு விலகுதல் இனி ஏது
விட்டு விலகுதல் இனி ஏது
எந்த வெப்பமும் நம்மை அணுகாது


வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே வீசு

மாசு இல்லாத என் ஆசை காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே

வீசு தென்றலே வீசு


இது போன்ற இனிய இசையாலும் தமிழ் வார்த்தைகளின் வண்ணக் கோர்வைகளாலும் பல பழைய பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

"ஏன் சிரித்தாய் என்னை பார்த்து. . ."    
பி. பீ. ஸ்ரீநிவாஸ் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து



No comments:

Post a Comment