Sunday 6 May 2012

கனவுகள் கற்பனைகள்...

கனவு என்பது பழகிப் போன ஒன்று. அதிலும் சிலர் படுத்ததும் கனவுலகுக்கு சென்றுவிடுவதாகச் சொல்வார்கள்.

வாழ்வியல் வல்லுனர்கள் இதை ஆழ்மனதின் பிரதிபலிப்பு என்றாலும், பொதுவாக கனவுகள் அமைதியற்ற சூழ்நிலைகளின் போது வருபவை என்றே நம்பப்படுகிறது.

'நிழலும் நிஜமுமாக ஒரு பெரும் போராட்டமே கனவு' என்போரும் நம்மிடையே உண்டு. விடிந்ததும் மறைந்திடும் கனவுகளை தொடர மீண்டும் படுக்கையில் வீழ்வோரையும் பார்த்திருக்கிறேன். 'நான் தூக்கத்தை தியாகம் செய்ய இயலாது காரணம் எனக்காக கனவுகள் காத்திருக்கும் ' என இலக்கிய நடையில் பேசுவோரும் இருக்கின்றனர். 'கார்பரேட் கனவுகள், கனவுகள் விற்பனைக்கு, கனவுகள் கற்பனைகள், தாவணிக் கனவுகள், காத்திருந்த கனவுகள்' என பல தலைப்புகள் கொண்ட படைப்புகள் எழுத்துலகில் சகஜம்.

இது இப்படி இருக்க, கனவுகள் பலிக்குமா என்ற கேள்விக்கும் எவ்வித உறுதியான பதிலையும் காணோம். சிலர் அதிகாலை கனவுகள் பலிக்கும் என்கிறார்கள்.

கனவுகள் பற்றிய உங்கள் அனுபவம் எப்படி?



No comments:

Post a Comment