Thursday 21 June 2012

அவசர உலகில் பெண்கள்...

இன்றைய அவசர சூழ் நிலையில் நம் சமூகப் பெண்மணிகள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கின்றன.

பிரச்சினைகளுக்கு சரியான தீர்வெடுக்கும் திறன் உள்ளதா என்பது பெரிய கேள்வியாக பலருக்கும் படுகின்ற அதே நேரத்தில், தகுந்த முடிவெடுக்க முடியாமல் திணறுவோர் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிவருகின்றனர்.

அவசரத்தில் முடிவெடுத்து கணவனை பிரியும் இளம் மனைவிகள் பின்பு தங்களின் குழந்தைகளோடு மனம் வெந்து வாழ்க்கையில் கஷ்டப் கிறார்கள். பாதிப்புகள் பல வர நாமே காரணமாகிவிடக்கூடாது.

ஆச்சரியம் மேலிடும் உண்மை எது தெரியுமா?

பார்க்கும் பத்து இளம் மனைவிகளுள் இருவர் சாதாரணப் பிரச்சினைகளினால் கணவனைப் பிரிந்து பிள்ளைகளோடு சிறமப் படுபவர்களே.

பெண்கள் பேசவேண்டிய நேரத்தில் பேசுவதும் பேசத் தேவையில்லா நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதுமே அவர்கள் வாழ்வினை உயர்த்தும். உணர்ச்சிவயப்பட்டு கொட்டித் தீர்த்திடும் வார்த்தைகள் அவர்களுக்கே பல பாதிப்புகளைக் கொண்டுவந்திடும் என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் ஒருவித அசாத்திய துணிச்சலில் எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்பு அல்லல் படுகிறார்கள்.

அன்மையில் நடந்த ஒரு ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவை:-
இப்படி தனித்து விடப்படும் பலர் சில காலம் தங்களின் தனிமையை ரசிக்கிறார்கள்.
புதிய ஆண் துணைகளுடன் கைபேசியில் காலத்தை செலவிடுகிறார்கள். அனேகமாக எல்லா பெண்களுக்கும் வேலையில் இருப்பதால், பொருளாதார சிக்கல் அவர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
ஆயினும், தங்களுக்கு வயதாகும் நிலையை உணரும்போது, தங்களுக்கு கைபேசி, சாட், டெலிபோன் நண்பர்கள் உற்றவர்களாகவும், உறவினர்களாகவும் ஆகிட முடியாதென படும் போது, தங்களின் கணவனுடனான பிரச்சினையை வெறு விதமாக கையாண்டிருக்கலாமோ என எண்ணுகிறார்கள்.

அதனால்தான் சொல்கிறோம், ஆத்திரத்தில் முடிவெடுத்து அமைதியாக வருத்தப் படுவது பெண்களுக்கு இழுக்கு என. இதை பெண்கள் உணரும் காலம் என்றோ...?

No comments:

Post a Comment