Wednesday 6 June 2012

பிறவிகள். . .

முன் ஜென்மம் இல்லையென்பதற்கு யாரும் ஆதாரம் தரமுடியாத நிலையில் அது இருப்பதாகத்தான் கொள்ள வேண்டி இருக்கிறது.

 "புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகி
 பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
 கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
 வல்லசுரராகி முனிவராய் தேவராய்
 செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
 எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்!"

என சிவபுராணத்தில் படித்ததை வைத்துப்பார்த்தால் முன் பிறவி இருப்பது மனதில் படுகிறது.

 நமது வேத நூல் கற்றரிந்த ஞானிகள் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்கு நமது பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களே காரணம் என்கிறார்கள்.

அதிலிருந்து இப்பிறவியில் நாம் நன்மைகளை மட்டுமே செய்யவேண்டியதன் அவசியம் தெரிகிறது. இப்போது நாம் செய்யும் நல்வினைகளுக்கு பலன் அடுத்த பிறவியில் தெரியும் என்கிறார்கள்.

முன் பிறவிக்கடனை தீர்க்க முடியாததால்தான் மேலும் மேலும் பிறவிகளை இறைவன் கொடுக்கிறார்.  அதாவது இப்பிறவியில் பழைய கணக்கு வழக்குகளை முடிக்க ஆயுட்காலம் போதாதனால் மீண்டும் ஒரு ஜென்மம் தேவைப்படுகிறதாம், மத நூல்கள் சொல்கின்றன.

"யாரும் உடனே தன் தீய குணங்களையும் செயல்களையும் நிறுத்திக் கொள்வதில்லை.எனவே அவர்கள் மெல்ல மெல்ல உணர்ந்து திருந்தும் வரை பிறவிகள் தொடரும்.." என்கிறார் மயிலாடுதுறை ஏ. வீ. சுவாமினாத சிவாச்சாரியார்.

No comments:

Post a Comment