Wednesday 6 June 2012

மாற்றங்கள், ஒண்ணா ரெண்டா....




அறுபதுகளில் நாம் கண்ட தமிழர்களுக்கும் இன்றிருப்போருக்கும் நிறைய மாறுதல்கள், அதிலும் நல்ல மாறுதல்கள்.
மூலைக்கு மூலை எழுதப் படிக்கத்தெரிந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது . கோயில் குளங்களில் பக்தர்கள் கூட்டம் படையெடுக்கத் தொடங்கிவிட்டது. முன்பு போல குருவெல்லாம் கடவுள் என்பது மாறி, அறிவு சார்ந்த வழிகளில் கடவுளுக்கான கடமைகளை நிறைவேற்றுகிறோம். நல்ல முன்னேற்றமே.
மாத வருமானத்தைமட்டுமே நம்பிக் கொண்டு இல்லாமல் இப்போது அனைத்துலக ரீதியில் நாம் வாணிபத்தில் பொருளீட்டுவது அதிகரித்துவிட்டது. உதாரணத்துக்கு, முகநூலில் வியாபாரம் தொடங்க எந்தவொரு தடங்கலும் இல்லை இன்று. சுதந்திரமாக தொழிலை தொடர இது ஏதுவாகிறது.
வெறுமனே வாழாமல் ஒருவிதப் பிடிப்புடன் நாம் வாழ்கிறோம் இப்போது. கல்வி, பொருளாதார, சமைய நுணுக்கங்கள் நமக்கு விளங்கத் தொடங்கிவிட்டன. அல்லது, குறைந்தது அவற்றை கற்றுணர ஆர்வம் காட்டுகிறோம்.
இது இன்னும் பல மடங்கு பெருகவேண்டும். அப்போதுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஈடுகொடுத்து நாமும் நமது அன்பான குடும்பத்தினரோடு சரிசமமாக நடைபோட முடியும்.


No comments:

Post a Comment