Monday 11 June 2012

மனசாட்சி. . .

கலங்கரை விளக்கம் கண்ணில் பட்டால் அருகில் கடல் இருக்கிறதென்று பொருள். கடலில் பயணிக்கும் கப்பல்களின் வழிகாட்டுதலுக்கு கலங்கரை விளக்கம் பெரிதும் உதவுகிறது.

அதே போன்று, உண்மை, நாணயம் ஆகிய இரண்டும்  சேர்ந்த மனசாட்சியே மனிதர்களாகிய நமக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

 நமது இந்த நற்குணங்களைக் கொண்டே நாம் எப்படிப் பட்டவர்கள் என்று மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

 நம் மனசாட்சி சரியாக தனது வேலையை செய்யும் போது, அநாகரிகமாக நடக்க இயலாது,
பணத்தின் மீதும் பொருட்களின் மீதும் பேராசை தோன்றாது,
' நடப்பது விதி' என நம்மால் ஆகாதவற்றுக்கு  வெறுமனே காரணம் கூற முடியாது.

ஆக,
நல்ல ஆன்மா நல்ல மனசாட்சியைக்கொண்டிருக்கும்...
நல்ல மனசாட்சி நம்மை நல்வழிப்படுத்தி நல்ல மனிதர்களாக்கும்....
நல்ல மனிதர்களாகும்போது நாம் பாவம் செய்வதிலிருந்து மீழ்கிறோம்....

No comments:

Post a Comment