Sunday 27 October 2013

நகைச்சுவை படங்களில் தீமைகள் இல்லை...


சீரியசான நாடகங்களையும், திரைப்படங்களையும் விட நகைச்சுவை படங்களே மக்களுக்கு நன்மைகளைச் செய்கின்றன. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதற்கிணங்க நல்ல நகைச்சுவை நமது நோய்களை நிறுத்தி வைக்கும் தன்மை வாய்ந்தது.

அந்த வகையில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்கும் அதே நேரம் அவரைப்போல மற்றவர்களும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமா எடுக்க முன்வருவார்கள் என எதிர்பார்ப்போம்.


( அடிதடி, வெட்டு, குத்து படங்களை விட, நகைச்சுவை எனும் தலைப்பில் மட்டமாக வரும் படங்கள் எவ்வித தீமையையும் செய்து விடாது.. )

இளைஞர்களிடையே கலாச்சார மாற்றங்கள் விபரீத நிலையை எட்டுவதற்குள் சில அதிரடி நடவடிக்கைகளை நம் சமூக நன்மையைக்கருதி சினிமா தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

வன்முறையைத் தூண்டும் படங்கள் இளையோரைக் கெடுப்பதாக இருப்பதால், நகைச்சுவை படங்களை இன்னும் சற்று புதிய முறைகளில் எடுத்து நல்லவிதம் தொழில் செய்யலாம். எவ்வித பழி பாவங்களுக்கும் அவர்கள் பதில் சொல்லத்தேவை இல்லை....இங்கும் சரி, அங்கும் ( ? )சரி.

ஒழுங்கும் பொறுப்பும் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதிலும் இளைஞர்களிடையே இல்லையேல் நாடே குட்டிச்சுவராகி விடும். அந்த நற்பண்புகளை இளையோர் மத்தியில் வளர்த்துவிட சினிமாவால் நிச்சயம் முடியும். ஹீரோக்கள் கத்தி, கம்பு, கடப்பாறையினைக்  கீழே போடும் அதே நேரம், ஹீரோயின்கள் தங்களது தாவணியினைக் கையிலெடுக்க சினிமாதான்  வழிகாட்ட வேண்டும் முடியும்.

அத்துறையில்  சம்பந்தப்படும் ஒவ்வொருவரும் ஒழுங்காகவும், பொறுப்பு மிக்கவர்களாகவும் நடந்து கொண்டால் சரி.


No comments:

Post a Comment