Thursday 17 October 2013

ஆசை...

உலகில் உள்ள எல்லா உயிர்களின் ஆசையும் ஏதாவதொரு வகையில் நிறைவேறுகின்றது....

புழுவிற்கு ஆசைப் பட்டதாம் மீன்,
மீனுக்கு ஆசைப்பட்டானாம் மனிதன்....
மீனுக்கு புழு சிக்கியது,
மனிதனுக்கு மீன் சிக்கியது.

ஆனால் புழுவிற்கு?

காத்திருந்ததாம் புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும்வரை.




No comments:

Post a Comment