Wednesday 2 October 2013

பெண்மை...


மென்மையான தன்மைதான் பெண்மை. அந்த மென்மையே பெண்மையின் இலக்கணம்  என அனைவராலும் போற்றத் தூண்டும் என்பார்கள்.

பெண்ணுக்குரிய  நற்பண்புகளில், ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாகவும், மென்மையாகவும் நடந்து கொள்வதே மற்றவரின் அன்பையும் ஆதரவையும் அடையும் சிறந்த வழியென சான்றோர்களால் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெண்மை என்பதற்கு தனித்துவமான பொருள் ஒன்றுண்டு. அதில் அன்பு, அமைதி, அடக்கம், சாந்தம் போன்றவை மட்டுமே அரசாட்சி செய்யும் குணங்களாகும்.

பல பரிமாணங்களில் நமது பண்பாட்டினை உயர்த்திப் பிடிக்கும் தனிப்பெரும் சக்தி பெண்மைக்குண்டு.


பொது நிகழ்வொன்றில் அன்னை மங்களத்துடன், சகோதரி சுஸ்மிதா அவர்கள்.

அதிகாரமும், அகங்காரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாதபோது பெண்மை போற்றிப் புகழப் படுகின்றது. இவை மையமிடும் இடங்களில் சமத்துவம் மேலோங்குகிறதே தவிர பெண்மையின் புனிதம் காணாமல் மறைகின்றது.
பெண்கள் என்றிட பெண்மையாகிவிடாது. ஆளுமைத் திறன்  அனைத்துமிருந்தாலும், காரிருள் வேளையில் நிலவொளி போல் இதமான உணர்வுகளை அதிர்வுகளாய் வெளிக்கொணரும் குணமே பெண்மையாகும்.

ஒரு வீட்டுக்கு மருமகளாக வரும் மணப்பெண்ணை முதன் முதலில் குத்து விளக்கேற்றச் செய்கின்றனர். விளக்கு இருளைப் போக்கி ஒளியைப் பரப்புவதுபோல, வீட்டின் குறைகளை நீக்கி நிறைகளை கொணருவாள் என அதற்குப் பொருள்.  அன்றிலிருந்து அவள் அந்த வீட்டுக்குத் தலைவி ஆகிறாள். எல்லா நல்ல குணங்களும் பொருந்திய ஒருவரால் மட்டுமே அந்தத் தலைமைப் பதவியை நன் கு தற்காத்துக்கொள்ள முடிகிறது. பெண்மையின் பூரண குணங்களினால், புதிதாய் குடிவரும் ஒரு பெண்ணுக்கு அது சாத்தியமாகிறது.

நம்மை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தத் தாய்  பெண்மையின் பிறப்பிடமாக போற்றப் படுகிறார். மனைவின் அன்பும், பண்பும், மகளின் பாசமும், நேசமும் பெண்மையின் இலக்கனமென பெரியோர் சொல்கின்றனர். இறைவனிடம் கொண்டபக்தியில் சாந்தம் பெண்மையின் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகிறது.

No comments:

Post a Comment