Wednesday 23 October 2013

சதுரங்கத்தில் உலக நாயகன்... ஆனந்த்


உலகம் தயாராகி வருகிறது. சென்னையில் நடக்கவிருக்கும் அனைத்துலக செஸ் விளையாட்டினைக் காண அனைவரும் ஆசையோடு காத்திருக்கும் தருணம் இது....

அந்த அறிவுக்கும், திறனுக்கும், யுக்திகளுக்கும் இடையே நடக்கும் அந்த போரில் நாம் விடுபட்டுவிடாமல் இருக்க செஸ் எனும் சதுரங்கம் பற்றிய நமது உணர்வை தட்டி எழுப்பி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நம் தமிழ் மகன் ஆனந்தின் அபாரமான சதுரங்க ஆற்றலை இன்னும் ரசிக்க ஏதுவாக இருக்கும்.

மற்றவர்கள்  நம்மிடம் வந்து, 'என்ன நடக்கிறது, ஆனந்தின் நிலை என்ன'   எனச்  சொல்வது  நமக்கு அழகல்ல. ஆட்டக்களத்தில் இருப்பது நமது ஆனந்த் எனும் உணர்வு மேலிட செஸ் பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வோம்.

இதுவரை அவரின் சாதனைகள் பற்றி அவ்வளவாக  தெரிந்திரா விட்டாலும், இனியாவது நம் சமூகத்திற்கு சேவை செய்யும்,   நம் சமூகத்தின் பிரதிநிதியாக அனைத்துலக அரங்கில் வீர நடை போடும் சதுரங்க உலக நாயகன், செஸ் சாம்பியன்  ஆனந்த் அவர்களை வரவேற்போம்...வாருங்கள்...





No comments:

Post a Comment