Monday 21 October 2013

கனவுகள் கற்பனைகள் ...

விடியலை நோக்கி இன்றைய இளைஞர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது கற்பனை உலகில்தான்.  உயர்ந்த இலட்சியத்தைக்  கொண்டிருந்தாலும், நடைமுறைப்படுத்தாவிடில், இந்த கனவுல சஞ்சாரம் எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

இதை மனதில் நிறுத்தி, கனவுலகில் இருந்து விடுபட்டு எதிர்கால செயல் வடிவத்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதே சிறப்பு.

தடைகளைத் தாண்டி எண்ணத்திற்கு உருகொடுக்கும் போதுதான் கனவுகள் கற்பனைகள் அல்ல, கற்பனைகள் கனவுகள் அல்ல எனும் உண்மை வெளிப்படத் தொடங்கும்.

இளையோரில் பலர் ஆரோக்கியமான திட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளனர். ஆனால், தொடங்கினால் வரப்போகும் ஆயிரமாயிரம் இடையூறுகளை நினைத்து அஞ்சுகின்றனர்.

சிக்கல்களும் சவால்களுமின்றி வாழ்க்கையில் முன்னுக்கு வர வேறு வழி உண்டா, அப்படி யாரும் வந்திருக்கிறார்களா...?

உங்கள் திறமையின் உதவியோடு சாதுர்யத்தை துணையாகக்கொண்டு, எதிர்படும் தடைகளை ஒவ்வொன்றாக உடைத்தெரிந்து போக முயல்வதே வெற்றிக்கான முதல் படி.

உங்கள் கனவுகளும் கற்பனைகளும் நிஜமாக இதுவே சிறந்த வழியுமாகும்.

No comments:

Post a Comment