Thursday 3 October 2013

எல்லோரும் நலம் வாழ...

உண்மையோ இல்லையோ, எல்லோரும் தங்கள் மனதில் தங்களை ஒரு ஹீரோவாக உருவகப் படுத்திக்கொண்டுதான் உலா வருகின்றனர். அதோடு, நல்ல  எண்ணங்களை மட்டுமே தாங்கள் பறைசாற்றுவதாக கூறிக்கொள்கின்றனர். அதுமட்டுமா. மற்றவர் மகிழ்விற்கும் நலத்திற்கும் இறைவனை வேண்டுவதாக சொல்வோரும் பலர் இருக்கின்றனர்.

போலியானோர் பலர் மத்தியில் இப்படி எல்லோருக்கும் பிடித்த வரிகளைப் பாடும் நிஜக் கதாநாயகர்களை கண்டுகொள்வது சிரமமானதே.

எங்க மாமா திரையில் இருந்து ....
"எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...

பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது
பொன்னான மனமென்று பேர் வந்தது
வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது

கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்
அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்
நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
நான் யாரென்று அப்போது நீ காணலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...

உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது
நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்"


No comments:

Post a Comment