Thursday 5 September 2013

முடிவுகள்...

வாழ்க்கையில் பல பிரபலங்களை நாம் சந்தித்திருக்கிறோம். சிலர் எட்டாத உயரத்தில் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். சிலர் மக்களின் மனதில் ராஜபீடமிட்டு தெய்வங்களுக்கு நிகராக பூஜிக்கப்படுகிறார்கள்.

ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை, இலக்கியம், மருத்துவம், சினிமா என பல துறைகளிலும் சிகரம் தொட்ட சாதனையாளர்களை நாம் பார்த்து வருகிறோம்.

ஆயினும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் அனைத்தும் பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல் மணப்பதில்லை.

அவரவரின் துணை, குழந்தைகள், பொருளாதார வலிமை, உடல் ஆரோக்கியம், உடனிருந்து அவரகளை கவனித்துக்கொள்ளும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சிலர் என இவற்றை வைத்தே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அமைகிறது.

மனமுவக்கும் செயல்களை காணும் நாம், அவர்களின் மனம் கனக்கும் முடிவுகளை விளங்கிக்கொள்ள இயலாமலே போய்விடுகிறது. எல்லோர் வாழ்வும் ரகசியமானதே. இருப்பினும், பல வெளியில் தெரிகின்றன, சில தெரியாமலே போகின்றன.

ஒரு சிலரின் வாழ்வு முடியும் போதுதான் அவர்களைப்பற்றிய  திடுக்கிடும் உண்மைகளும், அவர்கள் கடந்துவந்த சோக நிகழ்வுகளும் மற்றவர்களை எட்டுகிறது.

No comments:

Post a Comment