Sunday 29 September 2013

நேர்மை...

"திருடாதே, பொய் சொல்லாதெ, நேர்மையாக இரு" என இளம் வயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டது போல் நாம் நடந்துவருகிறோம்.

சில நேரங்களில் நமக்கு முன்னர் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது நம் மனசாட்சி நம்மை எதிர்க்கத் துணிந்துவிடுகிறது.

தப்பும், தவறும், திருட்டும், பொய்யும், பித்தலாட்டமும் கொண்டவர்கள் நம் கண் முன்பே சொகுசாக, முன்னேற்றமடைந்த நிலையில் காணும் போது வேறு எப்படித்தான் எண்ண முடியும்??

இதுபோன்ற சிந்தனையில் மனதில் தோன்றும் ஆதங்கம் நமது திறமைகளையே சந்தேகிக்க வைத்துவிடுவதும் உண்டு. நமது கடின உழைப்பும், அதன்பால் வரும் எதிர்பார்ப்பும் எப்போது நமக்கு நல்ல நிலையை பெற்றுத்தரும் என நினைக்கும் போது, மற்றவர்களின் குறுக்கு வழி நமக்கும் சபலத்தை தோற்றுவிக்கும்.

 நேர்மைக்கும், ஞாயத்திற்கும் பலன் கிடைத்தால்தானே அதனைப் பற்றி உயர்வாக கருத.

ஆனால் முறையற்ற, அதர்ம வழிகளில் முன்னுக்கு வருவோர் அதனை பகிரங்கமாக சொல்லிக்கொள்ள முடியாது. அந்த குறுக்குவழிகளை பல பொய்களின் மறைக்க வேண்டி வரும்.

ஒரு திரைப்படத்தில் வில்லன் செய்யும் காரியங்களுக்குச் சமம் அவை.

இறுதியில் ஜெயிக்கப்போவது என்னமோ  ஹீ ரோதான், இல்லையா?

அதனால்தான் சொல்கிறோம்,
" எப்படியும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்க்கை..."
என்று.

No comments:

Post a Comment