Sunday 29 September 2013

ஆர்கானிக் காய்கறிகள்...

இயற்கையின் அருமை பெருமைகளை செயலில் காட்டும் தருணம் வந்துவிட்டது இப்போது. உடல் ஆரோக்கியத்துக்கு இயற்கை உரத்தினால் விளையும் காய் கறிகளை உட்கொள்வோர் தினம் தினம் அதிகரித்த வண்ணம்  இருக்கின்றனர். சீனர், மலாய்க்காரர்களோடு நம் சமூகத்தினரும் பல மடங்கு நன்மை தரும் ஆர்கானிக் காய் கறிகளை சமையலுக்கு பயன் படுத்தும் நடைமுறைக்கு மாறி வருகின்றனர்.

இயற்கை உரத்தினால் உட்பத்தி செய்யப்படும் காய் கறிகள் சாதாரண விலையிலிருந்து மூன்று அல்லது நான் கு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன தற்போது. ஆயினும் விலை என்பது இரண்டாம் பட்சமே. சந்தைகளுக்கு வரும் இதுபோன்ற இயற்கை வகைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

அன்மையில் கோலாலம்பூருக்கு அருகே உள்ள செலாயாங் பட்டனத்தில் போடப்படும் இரவுச் சந்தையில் இந்த நிலையினைக் கண்டேன். லாரியில் இருந்து இறக்கப்பட்ட அடுத்த பத்து நிமிடங்களிலேயே தருவிக்கப்பட்ட ஆர்கனிக் காய் கறிகள் விற்று முடிக்கப்பட்டு விட்டன.

உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனும் குறிப்போடு இவை விற்கப்படுவதால், பல குடும்ப மாதர்கள் இதனையே தங்களின் சமையலுக்கு தேர்வு செய்கின்றனர். இவை கிடைக்காத சூழ் நிலைகளிலேயே அவர்கள் சாதாரண காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, பலரும் வழக்கமான காய்கறிகளின் நச்சுத்தன்மையினையும், அது உடலுக்கு இழைக்கும் தீங்கினைப்பற்றியும் பேசத்தொடங்கி விட்டனர். ரசாயனக் கலவையினால் உற்பத்தி செய்யப்படும் விளைச்சல்களில் உள்ள நஞ்சானது பல விதங்களில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பலவித நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துவிடுகிறது.

சுய நலப்போக்கோடு அதிக இலாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் படும் ரசாயன உரங்களை விற்கும் நிறுவனங்கள் மக்களின் ஆரோக்கியத்தினை மதிப்பதில்லை. அவற்றினால் தோன்றும் ஆபத்துக்களை கண்களுக்குத் தெரியா சிறு சிறு எழுத்துக்களில் அச்சிடுகின்றனர். இது சட்டத்திலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் யுக்திதானே தவிர மக்களுக்கு நன்மை செய்வது போலில்லை.




No comments:

Post a Comment