Thursday 19 September 2013

நம் வாழ்வின் முடிவென்பது ரகசியமா?

வாழ்க்கையில் பல பிரபலங்களை நாம் சந்தித்திருக்கிறோம். சிலர் எட்டாத உயரத்தில் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். சிலர் மக்களின் மனங்களில் தெய்வத்திற்கு சமமாக  பூஜிக்கப்படுகிறார்கள்.

எல்லாத்துறைகளிலும் இப்படி சிகரம் தொட்ட சாதனையாளர்களை நாம் பார்க்கிறோம். மனதுக்கு மகிழ்ச்சியூட்டி நமக்கு தன்னம்பிக்கை தருவதாக அமைகிறது அவர்களின் பொது வாழ்வு.

ஆயினும், அவர்களின் தனிப்பட்ட வாழ்வினில் நடக்கும் எல்லாமும் பூத்துக்குலுங்கும் மலர்களைப் போல மணப்பதில்லை.  கண்முன்னே ஜொலித்தாலும், அந்த நட்சத்திர தாரகைகளின் உள்ளே கொதிக்கும் அக்கினிப் பிழம்பாக அவர்கள் நிஜவாழ்வு இருப்பது பலருக்கு தெரியாமலே போய்விடுகிறது.

அலைகளில்லாதா ஏரியில் சொகுசான படகில் பயணம் போவது போலத்தான் வாழ்க்கை. அலைகளில்லாதிருக்கலாம். ஆபத்திலையென அடித்துச் சொல்ல இயலுமா...? எங்கு தவறு நேர்ந்தாலும் படகு கவிழும் போது வாழ்க்கை என்பது கேளிவிக்குறியாகி விடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது வேறு யாருக்கும் தெரிவதில்லை. அது காலத்தால் காக்கப்படும் ரகசியமாகிறது.

பொதுவில் ஒருவர் எவ்வளவுப் பெரிய பிரபலமாக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட வாழ்வு கணவன் ( மனைவி ), பிள்ளைகள், உடல் நலம், ஆயுள், பொருளாதாரம் போன்றவற்றின் அமைப்பை பின்பற்றியே இருக்கிறது.
காலத்தால் மிக மிக ரகசியமாக வைக்கப்படும் இவர்களின் முடிவு இது போன்ற அந்தரங்கமான விசயங்களை ஒட்டியே அமைகிறது.

No comments:

Post a Comment