Friday 20 September 2013

இறை நம்பிக்கை...

கண்மூடித்தனமான நம்பிக்கை, அர்த்தமற்ற சடங்குகள் மற்றும் தனிநபர் மத போதனை எனும் அங்கலாய்ப்புக்களில் நம் சமூகத்தவர் அதிகம் ஈடுபடுவது போல் தோற்றம் ஒன்று இருக்கிறது. அவற்றில் மூர்க்கத்தனமான மரபுகளை வலியுருத்தும் மனித தன்மையற்ற செயல்களும் அடங்கும்.

மாயம், மந்திரம், நடு நிசிப் பூஜை, மலர்க்குளியல், காய்ப்புக்காய்ச்சுதல், சாமியாடுதல், கோழி ஆடு பலிகொடுத்தல் போன்றவை காலம் கடந்தும் நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் அவசியமற்ற செயல்கள்.

ஒரு புயலின் நடுவே ஆடாது அசையாது அதுதான் புவியீர்ப்பு விதி என நாம் நிற்க முடியுமா? நமது கிரஹித்தலில் எங்கோ தவறென்றல்லவா அதற்குப் பொருள்.

அறிவியல் முன்னேற்றம் எத்தனையோ சதவீதம் உயர்ந்து விட்டாலும், எதிர் மறைப் பேச்சில் கிணற்றுத் தவளைகளாக  இருப்பதறியாது ஜம்பம் பேசும் பலவான்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.

கல்வியறிவு இவ்வித முன்னேற்றத் தடைகளை உடைத்தெறிகிறது. மெய்ஞானத்துடன் விஞ்ஞானம் சேரும்போது அங்கே உண்மையான மதம் தோன்றுகிறது. நம் மதம்  தோன்றியதும் அவ்விதமே.



இறந்தோருக்கு நினைவுச்சின்னம் வைக்கலாம், கோயில் கட்டலாமா?

கறையான் புற்றுக்கு பாலூற்றி, குங்குமமிட்டு பூஜிப்பது ஞாயமா?

அடர்ந்த பெரும் மரத்துக்கு சேலை கட்டி அதை அம்மனாக நினைத்து வழிபடலாமா?

நாம் வகை தெரியாது வம்புகளில் மாட்டிக்கொள்ளும் நேரம், அடுத்த வீட்டுக்காரர் பில்லி சூனியம் வைத்துவிட்டார் என்பது இன்னும் நடைமுறைக்கு ஒத்துவருமா?

அதை எதிர்க்க பெரிய தாயத்தாக கட்டிக்கொண்டால் எல்லாம் சரியாகி விடுமா?

இவற்றைப்போல இன்னும் எவ்வளவோ சந்தேகங்கள்…. பலருக்கு சரியான விடை கிடைப்பதில்லை. விடை தேடி யாரும் முயற்சிப்பதில்லை. விடை தங்களை வந்தடைய காத்திருக்கும் நேரம் இவ்வித தவறுகளில் மூழ்கிவிடுகிறார்கள்.

“ நான் படிக்காதவன் ஐயா, வேறு என்னதான் செய்ய முடியும்…?” என யாரும் கேட்டால் நல்ல கேள்வி என்பேன் நான். காரணம் கேள்விகள் தான் சிறந்த பதில்களை தருவிக்கின்றன
பேரறிஞர்களின், பேராசிரியர்களின், மகான்களின், சித்தர்களின் பேருரைகளை கேட்பது முதல் படியாகும்.  ஆகம முறைப்படி கட்டப்பட்ட பெரிய கோயில்களுக்கு சென்று வணங்கி அங்குள்ள பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்வது இரண்டாம் படி.

இதில் தேறி வருவோர்க்கு மற்றவை சரிவரத் தெரியத் தொடங்கிவிடும்.

No comments:

Post a Comment