Tuesday 17 September 2013

சோம்பலால் சோம்பி நின்றால்...

சோம்பல் என்பது மனிதனின் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தடைகளில் முக்கியமான ஒன்றாகும்...  எந்தவிதத்திலும் நமக்கு நன்மை பயக்காத சோம்பலினால் நமது பதிவுகளும் சில காலம் தடைபட்டு விட்டது வழக்கமாக இங்கு வருகை தருவோருக்குத் அது   தெரிந்திருக்கும்.

மற்ற பணிகளின் குறுக்கீடுகளும் சற்று மந்தமாக இந்த பதிவுகள் வரக்காரணமாகும்.

இதோ மீண்டும் விறுவிறுப்பான புதிய பதிவுகள் இங்கே தொடருகின்றன.

ஆதரவு தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடை அன்பு நன்றிகள். இங்கு பல வேறுபாடான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறோமே தவிர உபதேசமாகவோ, அறிவுறையாகவோ அல்ல என்பதனை இங்கே மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நல்லதாய் இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம்... வேண்டாமெனில் ஒதுக்கித் தள்ளிவிடலாம்.

கண்முன்னே நடப்பவைகளை இங்கே பதிவிடுகிறேன். நல்லன தொடரவும் மற்றவை காணாமல் போகவும் இறைவனை வேண்டுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. படிப்பதனால் மட்டுமே தீயவை அழிந்துவிடுமானால் நம்மில் பலர் மயங்கி விழும் காட்சிகள் அதிகமாகிவிடும்.

என்னமோ சொல்றோம்....என்ன நடக்குதுன்னு பார்ப்போமே....

தமிழ் நாட்டினைப் போலில்லாமல் இங்கு நம் மலைநாட்டில் பதிவுலகில் நேரத்தைச் செலவிடுவோர் மிகவும் குறைவு. அங்கிருக்கும் பதிவுலக அமைப்பு போல இங்கு ஒன்றுகூடும் நிகழ்வுகள் நடப்பதில்லை. இருப்பினும் என்னுடைய நண்பர்களின் கட்டாயத்தில் தொடங்கிய இந்த " எண்ணங்கள் ஆயிரம்" வலைப்பூ, இப்போது 700வது பதிவினை நோக்கி நகர்வது மகிழ்வளிக்கிறது.




அபூர்வ சகோதரிகளாக ஒரு இரட்டைவேட படம்...
 

No comments:

Post a Comment