Friday 13 September 2013

சுயநலம் பெரிதா....

மேல் நாட்டில் சுயநலமும் ஒரு சிறப்பே என்கின்றனர்.

அடுத்தவருக்கு உதவுவது அவர்களை முன்னுக்கு வராமல் முடங்கச் செய்யும் செயல் எனும் பொருள்பட பேசுகின்றனர்.

பொதுவாக மேல் நாடுகளில் நண்பர்களுடன் கடைத்தெருவிற்கு சென்றாலோ, உணவகங்களுக்குச் சென்றாலோ தங்களுடைய பங்குக்கான பணத்தினை  மட்டும் செலுத்திவிடுவர் எனுமொரு நடமுறை வழக்கம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதே போல, அங்குள்ள குடும்பங்களிலும் பதின்ம வயதைக் கடந்தோர் சில வருடங்களிலேயே தனித்து வாழப் பழகி விடுகின்றனர். சுய நலம் என்பது அங்கே குறையாகப் படுவதில்லை.

ஆன் ராண்ட் எனும் எழுத்தாளர் " தெ வெர்ச்சு ஒஃப் ஷெல்ஃபிஷ்னஸ் " எனும் தனது புத்தகத்தில் இன்னும் பலவற்றை எழுதியிருக்கிறார்.  அடுத்தவருக்கு ஓடோடிச் சென்று உதவுவது அவர்களுக்கு " நீங்கள் செய்யும் பாவம்" என்கிறார்.

அடடா...எப்படியெல்லாம் எழுதி சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் ஒன்று, இப்புத்தகத்தைப் படிக்காமலே, நம்மில் பலர் மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மையின்றி வாழ்கின்றனர்.

மேலை நாட்டு ஜீன் இவர்கள் உடலிலும் ஓடுகிறதோ.

No comments:

Post a Comment