Saturday 10 November 2012

சொந்த பந்தங்களைச் சந்திப்போம்...

விஞ்ஞானம் வளர வளர நம் வாழ்வில் நடக்கும் பலவும் அதற்கேற்றாற்போல் மாறி வருகின்றன. சிறு பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரை ஏதாவதொரு மின்னியல் பொருளைக் கட்டிக்கொண்டு நேரத்தை வீணாக்கி வருகிறோம். கைப்பேசி, கணினி மற்றும் மின்னியல் விளையாட்டுகள் என நேரிடையான சமூகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு வீண் பொழுது போக்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எதிர்வரும் தீபத் திருநாளிலாவது, அதுபோன்ற அடிமைச் செயல்களுக்கு ஓய்வு கொடுத்து நம் உற்றார் உறவினர்களை சென்று சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொள்வதுடன் நமது பாரம்பரிய கலாச்சார நடப்புகளுக்கு ஆதரவு நல்குவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்...


மேலே படத்தில் : டாக்டர் அருள் துரைராஜா


No comments:

Post a Comment