Wednesday 7 November 2012

தீபாவளி நல்வாழ்த்துகள். . .


தீபாவளி வந்துவிட்டது... இன்னும் சில தினங்களில் நாம் அனைவரும், ஒரு வருடம் காத்திருந்த அந்த பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட இருக்கிறோம். ஆடம்பரமாக இல்லாமல், செலவுகள் அதிகம் செய்யாமல், நம் தகுதிக்கேற்றாற்போல் சிக்கனமாக, அடக்கமாக ஆனால் அதே நேரம் குதூகலமாக கொண்டாடிட  இவ்வேளையில் முடிவெடுப்பது மிகவும் சிறந்தது.

ஒரு நாள் வரும் பெருநாளுக்கு கடன் வாங்கி வருடம் முழுவதும் வாங்கிய கடனை அடைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 'உயர்ந்த உள்ளம்' கமல ஹாசனைப்' போல தடபுடலான விருந்துகளில் வீண் விரயம் செய்வதை தவிர்ப்போம்.  உலகில் சத்து உணவு கிடைக்காத மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய குழந்தை என்பது அதிர்ச்சியான உண்மை. சில நாட்களுக்கு முன்னர் தான் இதைப் படித்த ஞாபகம். எனவே, விருந்துபசரிப்புகளில் வீணடிக்கப்படும் உணவை பற்றிய விழிப்புணர்வை நாம் நினைவில் கொள்வோம். மதுபானங்கள் உடல் நலத்துக்கு தீங்கு செய்வன. அவையும் வேண்டாம்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், இதய நோயினால் துண்பப்படுகிறவர்களும் இந்த தீபாவளி வேலையில் சாப்பிடும் உணவுப்பண்டங்களில் அதிக கவனம் செழுத்த வேண்டும்.
  -  சர்க்கரை வேண்டாம்
  -  எண்ணெயில் பொரிக்கப்படும் பதார்த்தங்களையும் பட்சணங்களையும்       உட்கொள்வது அளவோடு இருக்கட்டும்.
  -  இறைச்சி, முட்டை மற்றும் துரித உணவு ( ஃபாஸ்ட் புட் ) போன்றவற்றை தவிர்ப்போம்.

பெரியோர் சொன்னபடி, தீபாவளி நாளில் இயன்றவரை அசைவத்தை தவிர்த்துவிடுங்கள். பின்பொரு நாளில் வாய்க்கு ருசிப்பவற்றை சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.

 இந்த தீபாவளியின் போது நமது உணவு கட்டுப்பாடுகளை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒரு பொழுதும்  வேண்டாம்.  ஒரு நாள் ருசிக்கு வாழ் நாள் ஆரோக்கியத்தை பணையம் வைப்பது அறிவுடைமை ஆகாது என்பது நமக்குத் தெரிந்தது தான் .

அண்டை அயலாருடனும், உற்றார் உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் இனியவைகளைப் பேசி இன்பமாய் கொண்டாடி மகிழும் இந்தத் தீபத் திருநாளில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது எனும் விழிப்பு நிலையில் எண்ணிப்பார்த்து ஏற்புடையதைச் செய்வோம்....

' விரலுக்கேற்ற  வீக்கம் ' என்பதே  காலத்துக்கு ஏற்ற உண்மை நிலை.  அதன்படி மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவோம்....

'ஹெப்பி டீபாவளி.....'

No comments:

Post a Comment