Tuesday 20 November 2012

இதுவும் வேண்டுமடா, எனக்கு . . .

நம் வாழ்வில் நடந்து விட்ட கசப்பான சம்பவங்களை இனி நினைக்கவே கூடாது என்றுதான் முயலுகிறோம். ஆனால் அப்படி முயற்சிப்பதே அச்சம்பவங்கள் ஆணி அடித்தாற் போல் நம் ஆழ்மனதில் பதிந்து விடக் காரணமாகி விடுகிறது.

பல வருடங்கள் நெருங்கிப் பழகிய நண்பர்கள் செய்த துரோகத்தினால் துவண்டு போனேன் ஒரு நாள்.

'இப்படியும் நடக்குமா....?' என்பதுவே  தினமும் நான் கேட்டுக் கொள்ளும் கேள்வி். இனிக்க இனிக்க பேசிய அந்தச் சில முகங்களை இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவர்கள் சிரிக்க, இன்புற்றிருக்க நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் அன்று.... அட..அவை நிஜங்களா....? பொருள் இன்று போகும் நாளை வரும், உண்மை அன்பே நிலைத்து நிற்கும் என கூறிய அந்த முகங்களா பின்னர் அப்படி நடந்து கொண்டன...?

சுய நல நோக்கே இலக்காகக்கொண்ட அவர்களோடா நான் அத்தனை நாள் இருந்திருக்கிறேன்?  இன்று வெட்கித் தலை குனியும்  எனக்கு அன்று ஏன் புத்தி சரியாக வேலை செய்யவில்லை...???

சிந்தனையின் பின்னனியில்  என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் இவை....


No comments:

Post a Comment