Tuesday 13 August 2013

பெற்றோர் நமது பொக்கிஷம்...

நமது தாய் தந்தையரின் அருமை பெருமை எல்லாம் நாம் வளரும் போது நமக்குத் தெரிவதில்லை. நமது பிள்ளைகளை வளர்க்கும் போது பலருக்கு புரியத் தொடங்குகிறது.

ஆயினும் பாவம், ஒரு சிலருக்கு சாகும்வரை விளங்காத ஒன்றாகவே போய்விடுகிறது, நமது குடும்ப தெய்வங்களாம் பெற்றோரைப் பற்றி.

அவர்களை அலட்சியம் செய்வதிலும் உதாசீனப்படுத்துவதிலும் இந்த உண்மை வெளிப்படுகிறது. பெற்ற பிள்ளைகள் மதிக்காத போது மற்றொரு குடும்பத்திலிருந்து வருவோர் மதிப்பளித்து கௌரவிப்பர் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

பாவத்தைக் கட்டிக் கொள்வதென்பது இதுதானோ...?

பெற்றோர் நமது பொக்கிஷம்...அவர்களை பத்திரப்படுத்தி, பாதுகாப்போம். வாழையடி வாழையாய் குலம் தளைக்க  அதுவே சிறந்த வழி.

No comments:

Post a Comment