Tuesday 13 August 2013

தோல்வி...

தோல்வியால் துவண்டு விடுவது இயற்கை. ஆனால் சற்று ஆழமாக சிந்திக்கும் போது, அந்தத் தோல்வியில் ஒரு சிறு பகுதி மட்டுமே "தோல்விக்கான" காரணமாக இருப்பதைக் காணலாம். 

அந்த சிறு விசயத்தினால்  நாம் தோல்வியடைந்து விட்டோம் என நமக்கு நாமே சொல்லிக்கொண்டு தவிக்கிறோம்.  மீதமுள்ள பெரும் பகுதியில் நாம் சாதித்த பல நம் கண்களுக்கு தெரிவதில்லை. இலைமறைக் காயாய் முன்னுக்கு வராமல் ஒளிந்து கொண்டுவிடுகின்றது.

அது தோல்வி என நாம் நினைப்பதாலேயே அது தோல்வி ஆகிறது. வெற்றியடவதற்கான ஒரு முயற்சி என நாம் நினைக்கத் தொடங்கினால் நமக்கு அது ஒரு பெரிய திருப்பமாக தோன்றத் தொடங்கும்.  நாம் தவற விட்டதை மீண்டும் கண்டுகொள்ள வழிகள் பல பிறக்கும்.

வாழ்வில் ஜெயித்தவர்களாக நாம் கருதும் பலர் பல முறை தோற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். அப்படி இருக்க ஒரு தோல்வியால் துவண்டு போய் உலகமே இருண்டுவிட்டதாக எண்ணிக்கொள்வது சரிதானா? அடுத்தது என்ன என்பதே நம்மை தெளிந்த சிந்தனையாளராக அடையாளம் காட்டும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment