Monday 26 August 2013

அளவுக்கு மீறினால்...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. என்றோ சொல்லப்பட்ட இது இன்றைய நடமுறைக்குப் பொருந்துமா? இன்று மட்டுமல்ல, என்றென்றும் எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளகூடியவற்றையே நமது முன்னோர் சொல்லிச் சென்றனர்.

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்...."
இது குரள்.

மயிலிறாகானாலும் அளவுக்கு மீறி வண்டியில் ஏற்றும்போது வண்டி பழுதாகிவிடும். அதன் பாரம் தாங்கும் பகுதி உடைந்து விடும் என்று வள்ளுவர் சொல்லியது பலவற்றுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்.

ஆக, இவ்வளவுதான் அளவு. அளவுக்கு மேல் போகும் போது பாரம் மட்டுமல்ல, எதுவும் நமக்கு பயன் தராது. சில நேரங்களில் அவை நமக்கு எதிராகவும்  மாறிவிடும் என்பது நமக்கு விளக்கப்பட்டு விட்டது.

தனிப்பட்ட வகையில் நம்முடைய.....  நமக்கு மட்டுமே உரிய அளவினை அடையாளம் காண்பதுதான் நமக்கு புரியாத புதிராக இருக்கிறது.

"ஹவ் மச் இஸ் டூ மச்?" என்று நகைத்தவர்கள் வாழ்வு இன்று எப்படியெப்படியோ மாறிவிட்டது.  அளவுக்கு மீறிய அமிர்தம் மட்டுமல்ல, அன்பும் விஷமாகிவிட்டது.

அவஸ்தையின் உச்சக்கட்டம், அளவை மீறுவதே.

 

No comments:

Post a Comment