Thursday 15 August 2013

மரக்கலங்கள்...


சாண்டில்யன் அவர்களின் 'கடல்புறா'  நாவலின் மூன்று பகுதிகளையும் படித்து முடித்தப்பின் கடலில் பயணிக்கும் மரக்கலங்களின் மேல் ஒரு வித மோகம் ஏற்பட்டது எனக்கு. திரையிலோ, தொலைக்காட்சித் தொடரிலோ அல்லது புத்தகங்களில் இடம்பெறும் புகைப்படங்களிலோ மனம் லயித்துவிடும். அந்த ஒரு தாக்கத்தை "கடல்புறா" எனக்குத் தந்திருந்தது 1980களில்.

அன்று போர் புரியவும், வணிகம் தொடர்பான வெளி நாட்டுப்பயணங்களுக்கும் மரக்கலங்களே உதவி இருக்கின்றன. அதன் பலனாக பெரும் நகரங்கள் பலவும் ஆற்றோரமோ அல்லது கடல் சார்ந்த பகுதிகளிலோதான் இருந்திருக்கின்றன. இந்துமாக் கடலில் ஒரு காலத்தில் தமிழர்களின் மரக்கலங்களே கோலோட்சிவந்திருக்கின்றன என்பதனை படிக்கும் போது நமக்குள் மகிழ்ச்சி பெருகுகிறது. நமது முன்னோர்களின் கட்டடக்கலையின் திறமைகளை போற்றிப்புகழும் அதே நேரம் அவர்களின் மரக்கலங்கள் இந்தியக் கடலில் சாகசம் புரிந்து வந்தது பெருமை கொள்ள வைக்கிறது.


No comments:

Post a Comment