Saturday 6 April 2013

என்ஸைட்டி...

என்ஸைட்டி. ....அது ஒரு வகை குறையுணர்வு...அது ஒரு வகை  மனக்குறை, ஒருவித ஏக்கம் கலந்த கவலை... துன்பப்படும் உணர்வு.
இதை ஆதங்கம் என்றும் சொல்வதுண்டு. ஆதங்கம்.... அதாவது 'என்ஸைட்டி'  நரம்புத்தளர்ச்சிக்கு ( நியோரோஸிஸ் ) கொண்டு சேர்க்கும் ஒன்றாக பல நேரங்களில் அமைந்துவிடுவதுண்டு. ஒருவரின் மனக்குமுறலை வெளிப்படுத்த வழி தெரியாத போது இப்படி நேர்கிறது. காக்காய் வலிப்பு என்பது இதனால் ஏற்படுவதுதான் பல நேரங்களில். பின்னரே இது உடல் ரீதியில் பல பின் விளைவுகளை உண்டு பண்ணுகிறது.

 நமக்குள் தோன்றும் சலிப்பு, எரிச்சல், பயம், அச்ச உணர்வு போன்றவற்றை வெளிக்காட்ட இயலாதபோது  மேற் சொன்ன நோயினால் பாதிக்கப் பட நேரிடும்.  நாம் நமக்குள்ளும் நம்மைச் சுற்றி உள்ளோரிடமும் காணும் அச்ச உணர்வே என்ஸைட்டி என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அடுத்து என்ன நடக்குமோ எனும் சஸ்பென்ஸ் ஆபத்தாகிறது சில நேரங்களில். ஒரு சிலருக்கு தங்கள் குடும்பத்தினரின் அலட்சியமும், அவர்களால் ஒதுக்கப்படுவதும் காரணங்களாவதுண்டு.

இதற்கு அடுத்த நிலை?
மன நோய் தான் இதற்கு அடுத்த நிலை.

ஒருவரின் ஆதங்க நிலையை அருகில் இருப்போரால் தெரிந்து கொள்ள முடியும்.  பாதிக்கப்பட்டோரின் எதிரும் புதிருமான செய்கைகள் ( கொன்வெர்ஷன் ரியாக்க்ஷன் ) பல விதங்களில் வெளிப்படும். திடீரென பேச முடியாமல் போகும், காது கேட்காது, பேய் பிடித்தது போல நடந்து கொள்வது, தூக்கம் வராமல் தவிப்பது ...இப்படி பல அறிகுறிகள் தோன்றும்.  உண்மையில் இவை அர்த்தமில்லாதவை போல தோன்றினாலும் ஒரு நோய்க்கான அறிகுறிகளாகும்.

ஆக இவற்றிற்கு முக்கிய காரணமாக அமைவது, என்ஸைட்டி எனப்படும் ஆதங்க நிலையே.

இதனை முறையான வழிகள் மூலமும், ஆரோக்கியமான எண்ணங்களின் மூலமும் கலைந்திடலாம். சிறிது கவனம் செலுத்தி  தினமும் இவர்களோடு உரையாடினால் பலரை அவர்களின்  இந்த இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பு : மன நோய் வராமல் தடுப்போம் எனும் விழிப்பு நிலை பிரச்சாரத்தின் போது காதில் விழுந்தவை...

No comments:

Post a Comment