Friday 12 April 2013

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும். . .

அதிர்ச்சியூட்டும் பல கொந்தளிப்புக்களுக்கிடையே சுழன்றுகொண்டிருக்கும் இவ்வுலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறுக்கத்தின் கரங்களில் நாம் பாடாய்ப் படுகிறோம்.

அதில் இருந்து வெளிப்பட நல்ல இசை நமக்கு பேருதவி செய்கின்றது. ஒரு சில நிமிடங்களானாலும் மனதை இலகுவாக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு.

இன்றைய ஸ்பெஷல்...
மனிதன் மாறவில்லை திரையில் இருந்து.
" குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்
குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்


குறு குறு பார்வை கோபம் கொண்டாலும்
குறு குறு பார்வை கோபம் கொண்டாலும்
குறு நகை இதழினில் விளையாடும்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்

இரவினில் வெண்ணையை திருடிடும் வேளையில்
இரு கால் சலங்கை கல கல கலவெனும்
இரவினில் வெண்ணையை திருடிடும் வேளையில்
இரு கால் சலங்கை கல கல கலவெனும்
அன்னை காதில் அந்த இன்னிசை கேட்பாள்
அன்னை காதில் அந்த இன்னிசை கேட்பாள்
அடிப்பாள் துடிப்பான் உடனே சிரிப்பான்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்


புல்லாங்குழலின் இன்னிசை கேட்டு
பொன்னிற கோபியர் அருகினில் வருவார்
புல்லாங்குழலின் இன்னிசை கேட்டு
பொன்னிற கோபியர் அருகினில் வருவார்
கண் படும் என்றே அன்னை யசோதா
கண் படும் என்றே அன்னை யசோதா
கண்ணா வாவென்று தன் புறம் மறைப்பாள்

குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்
கோகுலக் கண்ணனின் முகமெங்கும்
குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும்"

No comments:

Post a Comment