Monday 15 April 2013

PB ஸ்ரீநிவாஸ் பாடல்களுள் எனக்குப் பிடித்தவை...

பி பி சீனிவாஸின் பாடல்களை வானொலி,தொலைக்காட்சி என மட்டும் இல்லாமல் கம்பியூட்டரிலும்  அவ்வப்போது ரசிப்பவன் நான்....

நிலவே என்னிடம் நெருங்காதே...
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. (நிலவே)
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
(நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
(நிலவே)
அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...


என அவர் பாட அந்த குரலின் இனிமையில் மயங்கி செய்வதை நிறுத்தி அப்பாடலை முழுமையுமாக கேட்டு விட்டுத் தொடர்ந்த நாட்கள் பல.

அவர் குரலில் எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களும் சீடிக்களில் நிறையவே என்னிடம் உண்டு. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பல பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர். அதுமட்டுமல்ல வளரும் காலம் தொட்டு இப்போது வரை காலத்துக்கேற்ப பல பாடல்கள் அவர் குரலில் எனக்குப் பிடிக்கும்.
வயோதிகத்தில் மற்ற பாடகர்கள் போலில்லாமல் தலையில் தலைப்பகையின் கம்பீரம் கலந்த மிடுக்குடன் பல பொது நிகழ்ச்சிகளில் தோன்றியவர் பி பி சீனிவாஸ் அவர்கள். மற்றவர் வெறும் கையை வீசி வரும் அதே நேரம் தன்னுடன் ஒரு புத்தகத்தையும் பல பேனாக்களையும் கொண்டு வந்து நிகழ்ச்சியின் இடை இடையே பல கவிதைகள் எழுதி எல்லோரையும் அசத்தியவர் இந்த அற்புதக் கலைஞர்.

 நேரிடையாக பார்க்க கிடைக்காவிட்டாலும் தொலைகாட்சியில் அவர் தோன்றிய போதெல்லாம் அப்படி ஒரு சந்தோசத்தில் அவரின் பாடல்களை மனதில் அசைபோட்டதுண்டு.
'சின்ன சின்ன ரோஜா சிங்கார ரோஜா... '
என்ன அழகான பாடல் அவர் குரலில்.

அவர் பாடிய பாடல்களில் பலருக்கும் பிடித்த பாடல்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்....

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர
மருந்தொண்ட்று சொல்லம்மா


உன்னழகை கண்டு கொண்டால்
பெண்களுக்கெ ஆசை வரும்
பெண்களுக்கெ ஆசை வந்தால்
என் நிலைமை என்ன சொல்வென்

அஹா ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே ஹொய்
அது ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே


மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு வாடியது இன்று...


நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

மற்றும்,

நேற்றுவரை நீ யாரோ 
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
 ஒரே கேள்வி ஒரே கேள்வி

பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்
பால் வண்ணம் பருவம் கண்டு

பாட்டெழுதட்டும் பருவம்
போக போக தெரியும்

பொன் ஒன்று கண்டேன்
போன்னும் பொருளும் பெரிசல்ல

ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ரோஜா மலரே ராஜ குமாரி

சந்திப்போமா இன்று சந்திப்போமா
தாமரைக் கன்னங்கள்

தோள் கண்டேன் தோளே கண்டேன்
உன்னழகை கண்டு கொண்டால்

உங்கள் பொன்னான கைகள்
வாழ்ந்து பார்க்க வேண்டும்

வீசு தென்றலே வீசு
யார் சிரித்தால் என்ன

யார் யார் யார் அவள் யாரோ
எல்லாம் நாடக மேடை

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்...

போன்ற எண்ணற்ற இனிமையான படைப்புகளை மெய்மறக்க பாடிச்சென்றவர் .... பி பி சீனிவாஸ் அவர்கள்...

இவை மட்டுமா,
காதல் தோல்வியின் சோகத்தை இதயத்தை தொடும் விதம் சொன்னார் இந்த பாடலில்..
" கதையை கேட்டதும் மறந்துவிடு
கண்ணீர் வந்தால்  துடைத்துவிடு
கதையை கேட்டதும் மறந்துவிடு...."

காதலி காதலிப்பதாக சொல்ல, 'அது ஞாயமா என சிந்தித்து சொல்' என பண்புடன் சொன்னவர்.
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன....காதல்...

பலரின் துண்பங்களின் போதும் ஓடிவந்து உதவியது இவரது பாடல்களே...." கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு"
என செய்யாத தவறுகளில் சிக்கியோருக்கு ஆறுதலும்,
'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...'
என தியாகத்தின் தன்மையையும் உணர்த்தினார்....

மேலும் சில பாடல்கள்:

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறி விடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்


அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...


வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா - வளர்ந்த

குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?


நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா? (2)


கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு


பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
காணாத கண்களை காணவந்தாள்...
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)

ஆண்: ரோஜா மலரே ராஜக்குமாரி
ஆசை கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா வருவதும் சரிதானா
உறவும் முறைதானா

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ பேதம் இல்லையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையென்றோ


No comments:

Post a Comment