Saturday 6 April 2013

எளிதில் மறந்துவிடக்கூடியதே மனித மனம்

பெற்ற உதவியை எளிதில் மறந்துவிடக்கூடியதே மனித மனம்.

இது வயதானோருக்கும், அனுபவப்பட்டோருக்கும் தெரிந்ததுதான்..

ஆனால் மற்றவர்கள் என்னவோ தங்களுக்கு நடக்கும் அனுபவங்களினாலேயே இந்த மெல்லிய ஆனாலும் மிக முக்கியமானதை தெரிந்து கொள்கிறார்கள்.

இங்கே நாம் குறிப்பிடுபவர்கள் அடுத்தவர்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என ஒரு பெரிய பட்டியலையே வைத்திருப்பார்கள்.  அயினும் நாம் அவர்களுக்குச் செய்த எதுவுமே அவர்கள் நினைவில் இருக்காது.

இவர்களுள் ஒரு சிலர் திருக்குரளைக் கூட தங்கள் சுயநலத்துக்கு எடுத்துக்கொள்வர்....அதன் உண்மை பொருள் அறியாமல்.

"மறவற்க, மாசு அற்றார் கேண்மை
துறவற்க, துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு ... "

இது குறள். ( நமக்கும் குறள் தெரியும்லெ... )

ஆயினும், எவ்வித மாசுமின்றி நம்மோடு பழகுவோரின் உறவை உயர்ந்து போற்றும் அதே நேரம், நமது துண்ப காலத்தில் நமக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியவர்கள் நம்மை விட்டு ஓடி ஒளியும் போது அவர்கள் புனிதமானவர்கள் என்றோ , அவர்களின் நட்பையும் போற்றுங்கள் எனவோ குறள் சொல்லவில்லை.

இவர்களை தள்ளி வைப்பது ஒருவகையில் நாம் முன் பிறவியில் செய்த நன்மை எனத்தான் கொள்ளவேண்டும். நம் உதவிகளை அனுபவித்துவிட்டு நமது தேவையின் போது முகத்திரை போட்டு ஓடிடும் இவர்கள், பல நேரங்களில் என்னவோ அள்ளித் தந்துவிட்டதைப் போல அலட்டிக்கொள்பவர்களே.

நன்றி என்பது இருவழிப்பாதை.
என்றென்றும் அது ஒருவழிப்பாதை ஆகாது....



No comments:

Post a Comment