Friday 15 February 2013

இயலாதது ஒன்றுமில்லை. . .

எதிர்பார்த்த ஒன்று நடக்காத அல்லது கிடைக்காத போது இடிந்து போய் உட்கார்ந்து விடுகின்றனர் சிலர். பிறகு மனச்சோர்விலிருந்து இருதய நோய்கள் வரை பல வித பாதிப்புக்குள்ளாகின்றனர்.


பிளன் "ஏ" ஃபெயில் ஆகும் போது பிளன் "பி" எவ்வித தாமதமுமின்றி  இயல்பாகவே செயல்பாட்டிற்கு வந்துவிடவேண்டும்.  இதுவே வாழ்வின் எழுதாத கோட்பாடு. நாம் இறக்கும் வரை இயலாதது ஒன்றுமில்லை என நம்புவோருக்கு மட்டுமே இது சாத்தியம். இந்த நம்பிக்கை வருவதற்கு மனத்துணிவு அவசியம்.


அதனால்தான், திட்டமிடுதலில் அனுபவமிக்கவர்கள், எந்த ஒரு காரியத்திலும் இறங்கும் முன் எல்லா கோணங்களிலும் சிந்தித்து முன்கூட்டியே என்ன, எப்படி நடக்கும் என சீர் தூக்கிப் பார்த்து அதன் பின்னரே அதை செயல் படுத்துகின்றனர். இவர்களே ஒரு வழி அடைபடும் போது சற்றும் அசராமல் அடுத்த வழியினைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
எண்ணியது ஈடேறாத போது துவண்டு போய் "எல்லாம் முடிந்து விட்டதாக"  நினைப்பது கோழையின் செயல்.

No comments:

Post a Comment