Wednesday 20 February 2013

எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி.....

ஆண்டுகள் எத்தனையானாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருப்பவர், மன்னாதி மன்னன் மக்கள் திலகமே.
வெறும் நடிப்பில் மட்டும் ஏடுபட்டு பொருள் சேர்க்காமல், மக்களின் நல்வாழ்விலும் ஆர்வம் கொண்டு அவர்களுக்கு நல்லதை செய்ததன் வழி தலைவராகவும் ஆனார்.

புரட்சித் தலைவர் என அன்பாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் பல அரிய செயல்கள் மூலம் மக்களின் அபிமானதைப் பெற்று அவர்களின் இதய தெய்வமானார். மக்களுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர் அவர்.

தன்னைத் தேடி வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், தேவை ஏற்படும் இடங்களுக்கெல்லாம் தானே சென்று வாரி வழங்கிய வள்ளல் அவர்.

மறைந்து 25 வருடங்கள் ஆகியும் இவ்வுலகில் இன்னும் பல லட்சம் பேர் அவர் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் மற்றவர்பால் பகைமை காட்டாதவர்.

கர்ணனாக நடிக்கத் தெரியாதவர். ஆனால் நிஜக் கர்ணனாக வாழ்ந்து மறைந்தவர். "ஈந்து ஈந்து கரம் சிவந்தவர்" என ஒட்டு மொத்த மக்களாலும் பூஜிக்கப்படுபவர்.

உடல் ஊனமுற்றோருக்கு அவர் உயிலில் எழுதி வைத்த ஏற்பாடுகளைப் படித்தும் அவர்மேல் கலங்கம் கற்பிக்க யாராலும் இயலாது.  அப்படி ஒருவர் இருப்பாரானால், அவர் அரக்க மனம் படைத்தவராகத்தான் இருக்க முடியும்.  மனிதப் பண்புகளின்றிப் பிறந்தவராகத்தான் இருக்க முடியும்.

சிவாஜி மையம் எனும் பெயரில் ஓரிருவர் அப்படி செயல் படுவது இணையத்தில் தெரிய வருகிறது.  மதிப்புக்குறிய காலம் சென்ற நடிகர் திலகம் பெயருக்கு மாசு கற்பிக்கப் பிறந்த குலமோ குணமோ அற்றவர்கள் அவர்கள்.அவர்களை கண்டிக்கும் கடமை சிவாஜி குடும்பத்தினருக்கே உண்டு.

எங்கள் எம்.ஜி.ஆர் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்...

எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி.....

திரைப்படத் தலைப்பில் மட்டுமல்ல, நிஜத்திலும்!!!

No comments:

Post a Comment