Friday 15 February 2013

ஓடி விளையாடு பாப்பா...

தலைமுறை வேறுபாடு காரணமாக இன்றைய குழந்தைகளின் வாழ்க்கைத் தரமும் மாறுபட்டிருக்கிறது. பொதுவாக அறிவியல் சீர்திருத்தங்களால் வாழ்வியலும் முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி என்னவோ அவ்வளவு சிறப்பானதாக சொல்ல இயலவில்லை. 

குழந்தைகளின் உடலுக்குத் தேவையான வலிமையைப் பெற அவர்களை வெளிப்புற விளையாட்டிற்குத் தூண்ட வேண்டும். எப்போதும்  கணினிகளைக் கட்டிக்கொண்டு நேரத்தை ஒரு நான்கு சுவருக்குள் வீனடிக்கும்  குழந்தைகள் இப்படி உடல் வியர்க்க ஓடி ஆடி விளையாடுவது அவர்களின் அங்கங்களை ஆரோக்கியமாக வளரச்செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரித்து உடலின் சுரப்பிகளையும் நன்கு இயங்க வழி செய்கிறது வெளிப்புற விளையாட்டு. அதே நேரம், மூளைக்குச் செல்லும் அதிகப் படியான இரத்தத்தில் 'நோர்பைன்பிரின்' மற்றும் 'எண்டோர்பைன்ஸ்' அளவு அதிகரித்து மூளை சுறுசுறுப்படைகிறது.

சுறு சுறுப்பான பிள்ளைகள் கல்வியிலும் சிறந்து விளங்குவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இளம்வயதில் வாழ்வை இனிமையாக ஆடிப்பாடி அனுபவிப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெளியில் போய் விளையாடும் போது ஆடைகள் அழுக்காகிவிடும் என சில பெற்றோர் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது தவறு. மற்ற குழந்தைகளோடு வெளியில் விளையாடும் போது பல விசயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

அதிலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருக்கும் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், சித்தி சித்தப்பா, அத்தை மாமா, பெரியப்பா பெரியம்மா, தாத்தா பாட்டி என உறவுகளின்றி தனித்து வளரும் குழந்தைகளுக்கு  வெளியே விளையாட போய்வருவது பல நன்மைகளைச் செய்கிறது.

No comments:

Post a Comment