Sunday 8 July 2012

மலர்த்திருவிழா. . இப்போது நடந்துகொண்டிருக்கிறது

மலர் ஆர்வலர்கள் பலரும் வந்தவண்ணம் இருக்க, தாவரவியல் மலர்க்கண்காட்சி அமோக வரவேற்புடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

" காகிதப்பூ ... நீடித்திருக்கும் அழகு" எனும் கருப்பொருளில் இவ்வாண்டின் புத்ராஜெயா மலர்த்திருவிழா அமைந்திருக்கிறது.

பலரும் பார்த்து பாராட்டுகின்றனர்.

மலர் அலங்காரம் பற்றிய ஆர்வம் உள்ளோர் அவசியம் சென்று காணவேண்டிய ஒன்று இது.

இல்லத்தரசிகள் வீட்டுக்குள்ளும், வீட்டின் வெளிப்புறத்திலும் பூச்செடிகளை கொண்டு அழகு படுத்தும் யுக்திகளை இங்கு செல்வதின்மூலம் கண்டு கொள்ளலாம்.

மலேசிய சுற்றுத்துறை அமைச்சும், புத்ராஜெயா மேம்பாட்டுக்கழகமும் நகர்புற நல்வாழ்வு அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த வருடாந்திர நிகழ்வில் தவறாமல் பங்கெடுத்து பயண் பெறுவோம்.

No comments:

Post a Comment